கட்டிய தியேட்டரை திறக்க முடியாமல் தவித்த நாகேஷ்; சமயோசிதமாக உதவிய எம்.ஜி.ஆர்

பகையை மறந்து எம்.ஜி.ஆர், நாகேஷுக்கு உதவி செய்துள்ளார். சமயோசிதமாகவும் செயல்பட்டு உதவியுள்ளார்.

பகையை மறந்து எம்.ஜி.ஆர், நாகேஷுக்கு உதவி செய்துள்ளார். சமயோசிதமாகவும் செயல்பட்டு உதவியுள்ளார்.

author-image
WebDesk
New Update
nages mgr

நாகேஷ் கட்டிய தியேட்டருக்கு அனுமதி கிடைக்காமல் இருந்த போது அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் பகையை மறந்து பிரச்சனைக்கு சமயோசிதமாக அணுகி நாகேஷுக்கு உதவி செய்துள்ளார். 

Advertisment

நாகேஷ் எம்.ஜி.ஆர் பற்றி தவறாக பேசியதால் அவரை சந்திக்காமல் விலகி இருந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அவரை சந்திக்க  நாகேஷ் வந்துள்ளார். அங்கு பணியில் இருந்தவர்கள் நாகேஷை அனுமதிக்கவில்லை. இதுபற்றி பின்னர் தெரிந்த எம்.ஜி.ஆர் பணியாளர்களை கண்டித்து இனி நாகேஷ் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

பின்னர் ஒரு நாள் நாகேஷ் வந்தார். அப்போது அவருக்கு அனுமதி கிடைத்தது. எம்.ஜி.ஆரை சந்தித்த நாகேஷ், தன்னுடைய பழைய தவறுக்கு எம்.ஜி.ஆரிடம் மன்னிப்பு கேட்டார். நான் அதையெல்லாம் எப்போதே மறந்து விட்டேன். விஷயத்தை சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். நாகேஷ் கட்டிய தியேட்டருக்கு கார்பரேஷன் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று கூறியுள்ளார். நாகேஷை அனுப்பிய எம்.ஜி.ஆர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். 

அதில் குறிப்பிட்ட தூரத்தில் பள்ளியில் இருந்து தியேட்டர் தள்ளி இருக்க வேண்டும் என்று விதி உள்ளது தெரியவந்தது.  அப்போது எம்.ஜி.ஆர் பள்ளி நிர்வாகத்தை அழைத்து பள்ளி நுழைவு வாயிலை பின்புறத்தில் பயன்படுத்தினால்  பள்ளி மாணவர்களுக்கும் பாதிப்பு வராது, தியேட்டரையும் திறக்க முடியும் என்று கூறனிர். இதன் பின் தியேட்டருக்கு அனுமதி கிடைத்து 
நாகேஷ் தியேட்டரை எம்.ஜி.ஆர் திறந்து வைத்துள்ளார்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: