மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகிய ஷபானா; அடுத்தது என்ன?: அவரே கூறிய பதில் இங்கே

அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், அந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்

அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், அந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்

author-image
WebDesk
New Update
shabana
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற டி.வி தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ஷபானா. இந்த சீரியல் 1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சீரியல் மட்டுமல்லாது அந்த தொடரில் நடித்த அனைவருக்கும் நல்ல  வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் ஷபானாவுக்கு கார்த்திக் ஜோடியாக நடித்தார். இருவருடையே காம்போவும் சூப்பர் ஹிட் ஆனது. 

Advertisment

தனி ரசிகர்கள் வட்டாரமே உருவானது. இந்நிலையில், விஜய் டி.வியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தவரும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும்  `மீனாட்சி பொண்ணுங்க' தொடரில் நடித்து வரும் ஆர்யனை காதலித்து  ஷபானா-ஆர்யன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு சன் டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `மிஸ்டர் மனைவி' தொடரில் கதாநாயகியாக நடித்தார். அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், அத்தொடரில் இருந்து விலகுவதாக அண்மையில் ஷபானா அறிவித்தார். விலகுவதற்கான காரணம் ஏதும் அவர் கூறவில்லை.

இந்நிலையில்,  இன்ஸ்டாகிராமில் அவர் ரசிகர் ஒருவர் உங்களின் அடுத்த தொடர் பற்றி அப்டேட் கூறுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு 'விரைவில்' என ஷபானா பதில் அளித்துள்ளார். 

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: