MS Dhoni to debut as captain 7 in animated series :இது கிரிக்கெட்டுடன் எனது மற்ற ஆர்வங்களையும் உயிர்ப்பிக்கும்" என ஒரு அறிக்கையில் தோனி தெரிவித்திருந்தார்.
MS Dhoni to debut as captain 7 in animated series :இது கிரிக்கெட்டுடன் எனது மற்ற ஆர்வங்களையும் உயிர்ப்பிக்கும்" என ஒரு அறிக்கையில் தோனி தெரிவித்திருந்தார்.
MS Dhoni to debut as Captain 7 in animated series : இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்தியாவின் முதல் அனிமேஷன் ஸ்பை பிரபஞ்சத்தை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த கேப்டன் 7 தொடரின் முதல் பதிப்பு, விளையாட்டு நட்சத்திரமான அவரையே அடிப்படையாகக் கொண்டது.
Advertisment
இந்த அனிமேஷன் செய்யப்பட்ட புனைகதை தொடரில் எம்.எஸ். தோனி ஒருபோதும் பார்த்திராத அவதாரத்தில் இருப்பார். தற்போது முன் தயாரிப்பில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். மேலும், 2022-ம் ஆண்டில் கேப்டன் 7 வெளியிடப்படும் என்கிறார்கள். அற்புதமான புதிய திட்டத்துடன் இணைந்ததில் உற்சாகமாக இருக்கும் கேப்டன் கூல் தோனி, “கான்செப்ட் மற்றும் கதை அருமை. இது கிரிக்கெட்டுடன் எனது மற்ற ஆர்வங்களையும் உயிர்ப்பிக்கும்" என ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தோனி என்டர்டெயின்மென்ட்டின் நிர்வாக இயக்குநராக இருக்கும் தோனியின் மனைவி சாக்ஷி சிங், பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸுடன் இணைந்து இந்தத் தொடரைத் தயாரிப்பது குறித்துப் பேசியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “மஹியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனிமேஷன் புனைகதை நிகழ்ச்சியின் கான்செப்டுடன் BWO எங்களிடம் வந்தபோது, நாங்கள் உடனே களத்தில் இறங்கிவிட்டோம். ‘கேப்டன் 7’ உடன் நிறைய சாகசங்கள் காத்திருக்கின்றன."
இந்த அறிவிப்பை வெளியிட்டு அதன் சமூக ஊடக பக்கத்தில் கேப்டன் 7- ன் முதல் லோகோவையும் பகிர்ந்து கொண்டது. அதில், "தோனி என்டர்டெயின்மென்ட் மற்றும் கருப்பு வெள்ளை ஆரஞ்சின் எம்.எஸ்.தோனியின் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் அனிமேஷன் ஸ்பை பிரபஞ்சத்தின் “கேப்டன் 7” ஆரம்பம். எங்களால் ஏற்கெனவே செயல்திறனை உணர முடிகிறது!” என்றிருந்தது.
Advertisment
Advertisements
தோனி என்டர்டெயின்மென்ட் மற்றும் BWO ஆகியவை, பிரீமியம் நிகழ்ச்சியை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் உரிமையின் புதிய சீசனை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. தயாரிப்பாளர்கள் உள்ளடக்கத்தை உலகளவில் பல தளங்களில் விநியோகிக்க உள்ளனர்.
கடந்த முறை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற கேப்டன், ஆவணத் தொடரான 'ரோர் ஆஃப் தி லயன்' உடன் 2019-ம் ஆண்டில் தயாரிப்பில் இறங்கினார். ஸ்பாட் ஃபிக்சிங்கிற்கான இரண்டு ஆண்டு இடைநீக்கம் தொடர்ந்து கபீர் கான் இயக்கிய தோனியின் இந்தியன் பிரீமியர் லீக் அணி சென்னை சூப்பர் கிங்ஸின் மறுபிரவேசத்தைத் தொடங்கியது. கடந்த ஆண்டு, அவருடைய ஊடக நிறுவனம் ஒரு அறிமுக எழுத்தாளரின் வெளியிடப்படாத புத்தகத்தின் தழுவலின் அடிப்படையில் ஒரு புராண அறிவியல் புனைகதை வெப் சீரிஸை ஆதரிப்பதாக அறிவித்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil