ஒரு பாட்டுக்கு 63 டியூன், ஆனா‌ முதல் டியூனே ஓகே தான்; இளையராஜா பேசாததால் வந்த வினை: இந்த பாட்டு சூப்பர் ஹிட்!

இசையமைப்பாளர் இளையராஜா ஒரு பாட்டிற்கு 63 டியூன் போட்டது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இசையமைப்பாளர் இளையராஜா ஒரு பாட்டிற்கு 63 டியூன் போட்டது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
ilaiyaraaja

ஒரு பாட்டுக்கு 63 டியூன், ஆனா‌ முதல் டியூனே ஓகே தான்; இளையராஜா பேசாததால் வந்த வினை: இந்த பாட்டு சூப்பர் ஹிட்!

கடந்த 1981-ஆம் ஆண்டு இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ராஜபார்வை’. இந்த படத்தில் கமல்ஹாசன், மாதவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கமல்ஹாசனின் 100-வது படம் ஆகும். 

Advertisment

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் கலை ரீதியாக இது ஒரு முக்கிய படைப்பாக கருதப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் பார்வையற்ற வயலின் கலைஞராகவும், மாதவி ஆங்கிலம் பேசும் பெண்ணாகவும் நடித்திருந்தார்கள். 

ஒரு பார்வையற்ற மனிதரின் உலகம், அவரது காதல், உணர்வுகள் மற்றும் வாழ்க்கை குறித்த நுட்பமான பதிவுகளை இந்தப் படம் ஆழமாகப் பேசியுள்ளது. கமல்ஹாசன் தனது உடல்மொழியாலும், பார்வையின்மையை கண் அசைவுகளாலும் வெளிப்படுத்தி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். 

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அதற்கு காரணம் இசையமைப்பாளர் இளையராஜா தான். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘அந்தி மழை பொழிகிறது’ பாடல் இன்று வரையும் ஒரு காவியப்பாடலாக கருதப்படுகிறது. 

Advertisment
Advertisements

இந்நிலையில், ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலின் டியூன் உருவான விதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளனர். அவர்கள் பேசியதாவது, “அந்தி மழை பொழிகிறது பாடலுக்கு இளையராஜா ஒன்பது டியூன் போட்டார்.  சும்மா இருந்ததால் வந்த வினையை சொல்கிறேன். முதல் டியூனே நன்றாக இருந்தது. ஆனாலும் ஒன்பது டியூன் போட்டார்” என்றார் கமல்

தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் இளையராஜா “அந்தி மழை பாடலுக்கு 63 டியூன் போட்டேன். அதன் பிறகு முதலில் போட்ட டியூன் நன்றாக இருக்கிறது என்று சொல்லி அந்த டியூனை இறுதி செய்தோம்” என்றார்.

இசையமைப்பாளர் இளையராஜா ஒரே நாளில் ஆறு பாடல்களுக்கு டியூன் போடும் வல்லமை படைத்தவர். 80- 90 காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்தார்.

பல நடிகர்களும், இயக்குநர்களும் இளையராஜா தான் தங்களது படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று காத்திருந்து படங்கள் இயக்கிய காலங்களும் உண்டு

Ilaiyaraaja Kamalhaasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: