/indian-express-tamil/media/media_files/2025/09/24/panji-ilai-2025-09-24-19-15-15.jpg)
கம்பன், பாரதி, கண்ணதாசன்... இவங்களுக்கு பிறகு இவர்தான்: பிரபல தயாரிப்பாளரை பற்றி நெகிழும் இளையராஜா
தமிழ் திரையுலகின் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் பஞ்சு அருணாச்சலம். தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். தனது தனித்துவமான பங்களிப்பால் சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர்.
சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அவரது பயணம், இன்றுவரை பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. பஞ்சு அருணாச்சலம் அவர்களின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, இசைஞானி இளையராஜாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது.
அப்போது ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் உதவியாளராக இருந்த இளையராஜாவை அடையாளம் கண்டு, தனது ’அன்னக்கிளி’ திரைப்படம் மூலம் அவருக்கு முதல் வாய்ப்பு வழங்கினார். இந்த ஒரு சந்திப்பு, தமிழ் சினிமாவின் இசை வரலாற்றையே புரட்டிப் போட்டது.
பஞ்சு அருணாச்சலம் தனது பி.ஏ. ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், புதுமையான கதைக்களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன.
ரஜினி மற்றும் கமல் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்களையும் ஒரே படத்தில், இரட்டை வேடங்களில் நடிக்க வைத்த ’அபூர்வ ராகங்கள்’, கிராமிய பின்னணியில் அமைந்த ’கன்னிராசி’, ’கல்யாணராமன்’ போன்ற பல படங்களின் வெற்றிக்கு, அவரது கதை மற்றும் திரைக்கதை பங்களிப்பு முக்கிய காரணம் ஆகும்.
கண்ணதாசனுக்கு பிறகு மக்களுக்கு போய் சேரும் வகையான பாடல்களை பஞ்சு அருணாச்சலம் தான் எழுதினார் என்ற பெருமைக்குரியவர். இன்றும் பல திருமண வீடுகளில் ஒலிக்கும் ‘மண மகளே மண மகளே வா வா’ பாடலையும் பஞ்சு அருணாச்சலம் தான் எழுதினார்.
இப்படி திரைத்துறையில் பல புகழை பெற்ற பஞ்சு அருணாச்சலம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, "பாடல்கள் என்று எடுத்துக் கொண்டோம் ஆனால் கம்பனில் இருந்து பாரதியாரில் இருந்து கண்ணதாசன் எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்.
கண்ணதாசனுக்கு பிறகு பஞ்சு அருணாச்சலம் தான். கண்ணதாசன் இருக்கும் பொழுதே பஞ்சு அருணாச்சலம் ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘பொன் எழில் பூத்தது புது வானில்’ பாடலை எழுதியிருந்தார்.
பாடல் என்பது கேட்பவர்களுக்கு போய் சேரும்படி எழுத வேண்டும். அது கவிஞர் கண்ணதாசனிடம் இருந்து பஞ்சு அருணாச்சலம் வந்ததால் அவருக்கு தெரிந்தது. அப்படிப்பட்ட பஞ்சு அருணாச்சலம் என்னுடைய ‘அன்னக்கிளி’ படத்தில் முழு பாடலையும் எழுதியிருந்தார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us