/indian-express-tamil/media/media_files/2025/10/08/rishab-2025-10-08-14-30-32.jpg)
நடிகர், இயக்குநர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர் ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ‘காந்தாரா’ திரைப்படம் வெளியானது. இப்படம் முதலில் கன்னடத்தில் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பான் இந்தியா மொழியில் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்ட நிலையில் வசூலை குவித்தது.
ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ‘காந்தாரா’ திரைப்படம் முதலில் சீக்குவலாக வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் ப்ரீக்குவல் வெளியாகி உள்ளது. அதாவது ‘காந்தாரா சாப்டர் 1’ அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது.
இப்படம் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்து ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. வரும் நாட்களில் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா’ திரைப்படத்தை மட்டும் எடுக்கவில்லை. இதற்கு முன்பு பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
ரிக்கி
கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ரிக்கி’ திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். இதில், ரக்ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஹரிப்பிரியா நடித்திருந்தார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். ஒரு சாதாரண பெண் நக்சலைட்டாக மாறும் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி சிறிய தோற்றத்தில் நடித்திருப்பார். இப்படம், தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
கிரிக் பார்ட்டி
அடுத்ததாக ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படம் வெளியானது. கல்லூரி வாழ்க்கையின் நகைச்சுவை, காதல், ஆக்ஷன் கலந்த இந்த படத்தில் ரக்ஷித் ஷெட்டி, ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
சர்க்காரி ஹிரிய பிராத்தமிக ஷாலே, காசர்கோடு
’சர்க்காரி ஹிரிய பிராத்தமிக ஷாலே, காசர்கோடு’ பல விருதுகளை வென்ற திரைப்படமாகும். இது எல்லையோரப் பகுதிகளில் உள்ள கன்னடப் பள்ளிகளின் பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. இப்படமும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
காந்தாரா
காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டி மற்றும் சப்தமி கவுடா நடித்திருந்தனர். இது கன்னட சினிமாவை நாடு முழுவதும் அறியச் செய்தது. தேசிய விருது வென்ற இப்படம் பழங்குடி மக்களை பெரிய குடும்பத்தினர் எப்படி நடத்தினார்கள் என்பதைப் பற்றியது. இப்படம் அமேசான் பிரைம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமாகுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.