naam iruvar namakku iruvar mayan maha : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது தற்போது அந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த செந்தில் ஹீரோவாகவும், ’சரவணன் மீனாட்சி’யில் நடித்து புகழ் பெற்ற ரச்சிதா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள்.
Advertisment
சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். அதேபோல் ரச்சிதாவும் சரவணன் மீனாட்சி சீரியல் சீசன்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கலந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. செந்தில் மாயனாகவும், ரச்சிதா மகாவாகவும் இதில் நடித்து வருகிறார்கள்.
சின்ன வயதிலிருந்தே மாமா மகள் மகா மீது மிகவும் பிரியமாக இருக்கிறான் மாயன். வளர்ந்து பெரியவனானதும் மகா தான் உலகம் என வாழ்கிறான். ஆனால் மகாவுக்கு அப்படியான ஐடியா எதுவுமில்லை. இதற்கிடையே மகாவுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இதனால் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறான் மாயன். எப்படியோ பல தில்லாலங்கடி வேலைகளை செய்து மகாவை திருமனம் செய்து கொள்கிறான்.
Advertisment
Advertisements
பிடித்தோ, பிடிக்காமலோ இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கல். இந்நிலையில் தான் முதல் தங்கை காயத்ரிக்கு மாமா பையன் முத்துராசு உடன் நடைப்பெறவிருந்த திருமணத்தை நிறுத்து தனது நண்பன் கைதிக்கு மாயன் கட்டி வைக்கிறான். இதனால் ஏற்கனவே வீடு ரெண்டாகியுள்ளது. இந்நிலையில், மீண்டும் இப்போது முத்துராசு உடன் கடைக்குட்டி ஐஸ்வர்யாவுக்கு திருமணம்.
அதுவும் நிச்சயதார்த்தம் என்ற பெயரில் ஏற்பாடு நடந்து, கடைசியில் கல்யாண ட்விஸ்ட். என்ன நடக்க போதோ?