/tamil-ie/media/media_files/uploads/2020/11/Tamil-Serial-News.jpg)
Tamil Serial News
Tamil Serial News : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' மற்றும் 'செந்தூரப்பூவே' இரண்டு சீரியல்களும் இந்த வாரம், ஒன்றாக இணைந்து மக சங்கமமாக ஒளிபரப்பாகின்றன.
ரோஹித்தை இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்காதது “ஷேம்” – கொந்தளித்த காம்பீர்!
மாயனும் மகாவும் ஒன்றிணைந்து நல்லபடியாக வாழ வேண்டும் என்றால் குலதெய்வ கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என ரத்தினவேல் கூறுகிறார். அந்த பரிகாரத்தை நிறைவேற்ற அனைவரும் குடும்பமாக கோவிலுக்கு செல்கிறார்கள்.
இதனால் குடும்பத்தோடு கோயிலுக்கு சொல்கிறார்கள். இடை வழியில் இளநீர் குடிக்கலாம் என காரை நிறுத்த, மாமா ரத்தினவேலோ, ஒரு இளநீர் வாங்கி இரண்டு ஸ்ட்ராக்கள் போட்டு அதை மகா, மாயனிடம் கொடுக்கிறார். அதை பார்த்ததும் மகா கடுப்பாகிறார். அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு பேர் மாயனின் தங்கையை கேலி செய்கிறார்கள். அதை பார்த்து கடுப்பான மாயன் எரிமலையாக வெடித்து அனைவரையும் போட்டு துவைத்து எடுக்கிறார்.
அப்போது ஒருவர் ரத்தினவேல் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அந்த நேரத்தில், செந்தூரப்பூவே குழுவினர் எண்ட்ரியாகிறார்கள். ரத்தின வேலை காப்பாற்ற துரை சிங்கம் வருகிறார். மாயனும், துரை சிங்கமும் சேர்ந்து ரவுடிகளை அடித்து துவம்சம் செய்கிறார்கள். சண்டை முடிந்ததும் அனைவரும் துரைசிங்கத்தின் வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு சென்றதும் ரோஜா, மகா இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் எனத் தெரிய வருகிறது.
பேஸ்புக், யூ-ட்யூப், கூகுளில் உள்ள நீதிபதி கர்ணனின் பதிவுகளை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க, கர்ப்பமாக இருக்கும் ரோஜா வாந்தி எடுக்கிறார். இதனால் பயந்துப் போன மகாவோ, உனக்கு உடம்பு சரியில்லைன்னு நினைக்கிறேன், வா டாக்டரிடம் போகலாம் இல்லன்னா அத்தையிடம் சொல்லலாம் என்கிறார். அழத் தொடங்கும் ரோஜா, தனது கதையை மகாவிடம் கூறுகிறாள். மகா அவளுக்கு ஆதரவாக இருக்கிறாள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.