அன்று மணிரத்னம் பட நாயகி… இன்று விஜய் டிவியில் அம்மா நடிகை… இவரைத் தெரிகிறதா?

film and serial actress sabitha anand latest Tamil News: இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக உள்ள இயக்குநர் மணிரத்தினம் அப்போது இயக்கிய 'உணரு' என்ற படத்தில் தான் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் சபிதா ஆனந்த்.

film and serial actress sabitha anand latest Tamil News: இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக உள்ள இயக்குநர் மணிரத்தினம் அப்போது இயக்கிய 'உணரு' என்ற படத்தில் தான் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் சபிதா ஆனந்த்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
naam iruvar namakku iruvar tamil news: actress sabitha anand life story tamil

Sabitha Anand Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியலாக 'நாம் இருவர் நமக்கு இருவர் 2' சீரியல் உள்ளது. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில் நாச்சியார் கதாபாத்திரத்தில் நடிகை 'சபிதா ஆனந்த்' நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்னதாக பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இந்த சீரியல் மூலம் தனக்கென ரசிகர்களை சேர்த்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் இவர் வெள்ளித்திரையிலும் ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பிருக்காது.

Advertisment
publive-image

‘மாட்டொரு சீதா’ என்ற மலையாள படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார் தான் நடிகை சபிதா ஆனந்த். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தன்னுடைய பதினாறு வயதில் பல மலையாள படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image
Advertisment
Advertisements

தற்போது இந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக உள்ள இயக்குநர் மணிரத்தினம் அப்போது இயக்கிய 'உணரு' என்ற படத்தில் தான் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் சபிதா ஆனந்த். தொடர்ந்து மலையாளத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீக்க இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் 'சின்னப்பூவே மெல்லப்பேசு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், பல படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும், தமிழில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார்.

publive-image

வெள்ளித்திரையில் முன்னணி நாயகியாக இருந்த சபிதா ஆனந்த்க்கு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'கடல்புறத்தில்' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தோன்ற வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட இவர் காவியாஞ்சலி, சொர்க்கம், கோலங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

publive-image

தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை கச்சிதமாக நடித்து அசத்திய வரும் சபிதா ஆனந்த் தொடர்ந்து பல பிரபல சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இவரை தேடி வந்தது என்றால் நிச்சயம் மிகையாகாது. நடிகை சபிதா ஆனந்த தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் முதல் சீசனிலும் இவர் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Serial Actress Naam Iruvar Namakku Iruvar Vijay Tv Tamil Serial News Sabitha Anandh Vijaytv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: