Advertisment

குதிரை வண்டியில் அண்ணாநகர் டு தாம்பரம்: புகழின் உச்சியிலும் நாடக நடிகர்களுக்கு உதவிய சாவித்திரி

நாடக கலைஞர்களுக்காக குதிரை வண்டியில் அண்ணா நகரில் இருந்து தாம்பரம் வரை பயணம் செய்த சாவித்திரி; இரக்க குணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு என பாராட்டு

author-image
WebDesk
New Update
savithri

நாடக நடிகர்களுக்கு உதவுவதற்காக அண்ணா நகரில் இருந்து தாம்பரத்திற்கு குதிரை வண்டியில் நடிகை சாவித்திரி பயணம் செய்த சுவாரஸ்ய நிகழ்வை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகளில் நடிப்பு தாண்டி, கொடைப் பண்புக்காகவும் போற்றப்படுபவர் நடிகையர் திலகம் சாவித்திரி. அந்தவகையில் நாடக நடிகர்களுக்காக சாவித்திரி செய்த உதவி குறித்து தனியார் யூடியூப் சேனலில் நடிகர் ராஜேஷ் சுவாரஸ்ய சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 

நடிகை சாவித்திரியிடம், பசி நாராயணன் என்ற சாதாரண நடிகர், நாங்கள் தாம்பரத்தில் நாடகம் நடத்துகிறோம். நீங்கள் வந்து தலைமை தாங்க வேண்டும். நடிகை சாவித்திரி வருகிறார் என்றால் எங்களுக்கு நல்ல வசூல் வரும், என்று கேட்டிருக்கிறார். அதற்கு சாவித்திரி வருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார்.

பின்னர் பசி நாராயணன், அம்மா நீங்கள் வருகை தர எங்களால் கார் வழங்க முடியாது. கடினம், ஜட்கா (குதிரை வண்டி) வண்டி தான் ஏற்பாடு செய்ய முடியும் என்று தயங்கிவாறு கூறியிருக்கிறார். அதற்கு சாவித்திரி அதனால் என்ன வருகிறேன் கூறியிருக்கிறார். சொன்னது போலவே அண்ணா நகரிலிருந்து தாம்பரம் வரை ஜட்கா வண்டியில் பயணம் செய்து, மேடை ஏறி பேசினார் சாவித்திரி. 

இது ஜெமினி கணேசனை விட, தரும பிரபு, தாராள பிரபு என்று ஷோ காட்டுவதற்காக சாவித்திரி அம்மா செய்யவில்லை. அன்பு, இரக்கம், கொடை என்ற பிறவிக்குணம் இருப்பதை காட்டுவதற்காக நிகழ்வு இதுதான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Savithri Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment