ரீல் டு ரியல் சம்பவம்; 'புஷ்பா 2' பார்க்க வந்த போது போலீசாரிடம் சிக்கிய நிஜ கடத்தல்காரர்

'புஷ்பா-2’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸில் நிஜ குற்றவாளியை நாக்பூர் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

'புஷ்பா-2’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸில் நிஜ குற்றவாளியை நாக்பூர் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Pushpa boxoffic

நாக்பூரில் 'புஷ்பா 2' படத்தை காண வந்த போது போதைப் பொருள் வழக்கில் தேடப்பட்டு வந்த விஷால் மேஷ்ராம் என்ற நபரை  திரையரங்கிற்குள் வைத்து போலீசார் கைது செய்தனர். 

Advertisment

விஷால் மீது 2 கொலை உள்பட  27 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். இவர் படம் பார்க்க தியேட்டருக்கு வருவதை தெரிந்து கொண்ட போலீசார் அவரின் காரை பஞ்சர் செய்து வியாழக்கிழமை படத்தின் க்ளைமாக்ஸின் போது தியேட்டருக்குள் வைத்து கைது செய்தனர். 

நள்ளிரவில் தியேட்டருக்குள் வைத்து நடந்த இந்த கைது நடவடிக்கையை கண்டு அங்கு வந்திருந்த 
 பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விஷால் தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விரைவில் நாசிக்கில் உள்ள சிறைக்கு மாற்றப்படுவார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: