நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.
கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார். சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியா உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து இன்று ஒரு ராணி போல திரையுலகில் ஆட்சி செய்து வருகிறார்.
’நானும் ரவுடி தான்’ படத்தில் இணைந்து பணியாற்றிய போது, நயன்தாராவுக்கும், படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போதிருந்து இருவரும் கோயில்கள், வெளிநாடு, என பல இடங்களுக்கு ஓன்றாக சுற்றி வருகின்றனர். அடிக்கடி தனி விமானத்திலும் பறக்கின்றனர்.
ஒருமுறை விஜய் டிவியில் நெற்றிக்கண் பட பிரோமோஷன் நிகழ்ச்சியின் போது, நயன்தாராவிடம், தொகுப்பாளினி டிடி’ மோதிரம் குறித்து கேட்க’ அப்போது நயன்தாரா இது நிச்சயதார்த்த மோதிரம் என்று கூறினார்.

இந்நிலையில், இருவருக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதாக இணையத்திலும் அடிக்கடி வதந்திகள் பரவியது. அப்படி, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சில மாதங்களுக்கு முன்பு, சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் திருமண வாழ்த்துகளை கூறினர். அதற்கு காரணம், அந்த வீடியோவில்’ நயன்’ தனது நெற்றியில் குங்குமம் வைத்திருந்தது தான்.
அப்படியானால் நயனுக்கும், விக்கிக்கும் ஏற்கெனவே திருமணம் முடிந்து விட்டதா? என பல ரசிகர்களும் யோசனையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட ஆண்டுகள் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, இப்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இவர்களது திருமணம், ஜூன் 9ஆம் தேதி, திருப்பதி கோயிலில் வைத்து நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில்’ நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து விக்கி, அஜித் நடிப்பில் ஏகே 62 படத்தை இயக்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“