/indian-express-tamil/media/media_files/NYscfs3CgmeJ018XqnJl.jpg)
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, தனது குழந்தைகளை அக்கறையாக கவனித்துக்கொள்ளும் முனைப்பில் தான் வசிக்கும் அப்பார்ட்மெண்டில் சண்டை போடுவதாக பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
நடிகை நயன்தாரா கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் வெற்றித் தடம் பதித்தார். தென்னிந்திய சினிமா நடிகைகளில் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்.
முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து, லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
விரைவிலேயே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றதாக அறிவித்தனர். அவர்களுடைய பெயர் உயிர் - உலக் என்று தெரிவித்தனர்.
நடிகை நயன்தாரா சினிமாவில் மட்டுமில்லாமல் பிஸினசிலும் களம் இறங்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். நயன்தாரா தொடங்கிய ஃபெமிநயன் (Femi9) என்ற நிறுவனம் 1 கோடி சானிடரி நாப்கின்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்தனர்.
அதே நேரத்தில், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் நேரத்தை செலவிடுகிறார். கணவர், குழந்தைகளுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
நடிகை நயன்தாரா சென்னையில் எழும்பூரில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், குழந்தைகளுடன் நேரத்தை செலவிடும் நயன்தாரா, குழந்தைகளை அப்பார்ட்மெண்ட்டுக்கு கீழே அழைத்து வந்து விளையாடுகிறாராம். அப்போது, தனது குழந்தைகளை அக்கறையாக கவனித்துக்கொள்ளும் முனைப்பில் ஏதாவது சின்ன விஷயம் என்றாலும் நயன்தாரா சண்டை போடுவதாக பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.
அப்படி ஒருநாள், நயன்தாரா அப்பார்ட்மெண்ட்டில் கீழ்தளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பார்ட்மெண்ட்டுக்குள் வேகமாக வந்த ஆட்டோக்காரரிடம் சண்டை போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், மற்றவர்களிடமும் சண்டை போடுவதாக அப்பார்ட்மெண்ட் அசோசியேஷனில் புகார்கள் வருகின்றன என பிரபல பத்திரிகையாளர் கூறிய தகவல் வைரலாகி வருகிறது.
இதனிடையே, நடிகை நயன்தாரா தனது திருமண நாளைக் கொண்டாடி இருக்கிறார். இதையொட்டி, நயன்தாரா மற்றும் கணவர் விக்னேஷ் சிவன், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் நடிகை நயன்தாராவுக்கு திருமண நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.