/indian-express-tamil/media/media_files/4p1cXs4sP201VWbdpxse.jpeg)
Kanyakumari
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன்இன்று (மே14) தொடங்குகிறது.
நயன்தாரா சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் வேடத்தில் "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தில் நடித்தார், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. கன்னியாகுமரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படபிடிப்பு நடைபெற்றது.
நயன்தாரா அவரது கணவருடன் அந்த படபிடிப்பிற்கு வந்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் படம் வெளியான பிறகு நயன்தாரா, ஒவ்வொரு ஆண்டும் கன்னிபகவதியம்மன் கோயில் திருவிழா நாளில் வந்து பகவதியம்மனை கணவனுடன் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டு வைகாசி திருவிழாவின் முந்தைய தினமானநேற்று (மே13)பகவதியம்மன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்த நயன்தாரா, சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயில், சாமி தோப்பு தலைமை பதிக்கும் கணவருடன் சென்று தரிசனம் செய்தார்.
இந்த கோவில்களின் வெளியே நடிகை நயன்தாராவை காண ரசிகர்கள் கூட்டம் காத்து நின்றது.
செய்தி: த.இ.தாகூர், குமரி மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.