தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நயன்தாரா கடந்த 2011 ஆம் ஆண்டில் காதலுக்காக திரைப்படங்களை முற்றிலுமாக விட்டுவிட முடிவு செய்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்டரி கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார். அதன்பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
Read In English: Nayanthara reveals why she quit films while in relationship with Prabhudeva: ‘I thought you have to compromise if you want love’
இதனிடையே சமீபத்தில் நயன்தாரா தனது முன்னாள் காதலா பிரபுதேவாவின் ஆலோசனையின் பேரில் தான் திரைப்படங்களை விட்டு வெளியேற ஒப்புககொண்டதாக கூறியுள்ளார். தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு நயன்தாரா அளித்த ஒரு பேட்டியில், 2011-ம் ஆண்டு, திரைப்படங்களை விட்டு விலகுவதற்கான தனது முடிவைப் பற்றி விரிவாகப் பேசினார்.“என் வாழ்க்கையில் காதல் வேண்டுமென்றால் நான் சமரசம் செய்ய வேண்டும் என்று நம்பிய ஒரு கட்டத்தில் இருந்தேன். அப்போது நான் மிகவும் பலவீனமாக இருந்தேன்.
திரைத்துறையில் பலவிதமான உறவுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம் என்பதற்கும் இது பங்களிக்கிறது. நான் அதை மோசமாக சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது திருமணம் போன்ற மிக நீண்ட காலமாக தொழில்துறை செயல்படுவதை நாம் பார்த்த விதத்தினால், அந்த நேரத்தில் பரவாயில்லை என்று நினைத்தேன். என்னுள் இருக்கும் பெண் உன் வாழ்வில் காதல் தேவை என்றால், எங்கேயாவது சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று நிஜமாகவே நினைத்தாள்.
நீங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும். நீங்கள் ஏதாவது செய்வது உங்கள் துணைக்கு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதைதியாகம் செய்ய வேண்டும் என்பது தான், அந்த நேரத்தில் காதல் பற்றிய எனது புரிதல். அந்த உறவுதான் என்னை இன்றைய நிலையில் ஆக்கியது. அந்த குறிப்பிட்ட உறவு இல்லாவிட்டால், இன்று நான் இருப்பதற்கான பலம் கிடைத்திருக்காது என்று நினைக்கிறேன். என் திறமை என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதன் பிறகு, நான் முற்றிலும் மாறுபட்ட மனிதனாக மாறினேன்.
நான் திரைப்படங்களில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக ஒப்புக்கொண்டாலும், எனது கடைசிப் படமாகக் கூறப்படும் ஸ்ரீராம ராஜ்ஜியத்தின் கடைசி ஷாட்டைக் கொடுத்தது என்னை கடுமையாக பாதித்தது. "இது ஒரு தொழில் மட்டுமல்ல, பணம் அல்லது புகழைப் பற்றியது அல்ல என்பதை நான் புரிந்துகொண்டேன், ஆனால் இது என்னுள் ஒரு பகுதியாக மாறிவிட்டது, இதைச் செய்ய தான் நான் பிறந்தேன். இந்தத் தருணத்தில்தான் நான் படங்களில் இருந்து விலகி இருக்க முடியாது என்று எண்ணினேன் என்று கூறியுள்ளார்.
2011-ம் ஆண்டு, நடிப்பில் இருந்து விலகிய நயன்தாரா, பின்னர், அவரது காதல் முறிந்தபிறகு 2013 இல் நாகார்ஜுனாவின் கிரேக்கு வீருது திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார். தனது கணவர் விக்னேஷ் சிவனைச் சந்தித்த பிறகு, காதல் பற்றிய தனது எண்ணம் எவ்வாறு மாறியது என்பதையும் நயன்தாரா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “என் கணவரை சந்தித்த பிறகு எனக்கு காதல் பற்றிய முழு கருத்தும் மாறிவிட்டது. ‘உன் உறவை நிறைவேற்ற தியாகம் செய்ய வேண்டும், சமரசம் செய்ய வேண்டும், நிபந்தனையற்ற காதல் இல்லை என்று நம்பிய பெண் நான், ஆனால் நிபந்தனையற்ற காதல் இருக்கிறது என்பது இப்போதுதான் புரிகிறது. அதற்கு நீங்கள் சரியான நபரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்,
நயன்தாரா விக்னேஷ் சிவனை நான் ரவுடி தான் என்ற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. எட்டு வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்த பிறகு. இந்த ஜோடி ஜூன் 2022 இல் திருமணம் செய்து கொண்டது. இந்த ஜோடி சமீபத்தில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது, இது அவர்களின் காதல் வாழ்க்கை, நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் அவரது கடந்தகால உறவுகளை பற்றி கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.