10-ம் வகுப்பில் தொடங்கிய காதல்… பாவம் கணேசன் சீரியல் நேகா ரியல் லவ் ஸ்டோரி!
Vijay tv Paavam Ganesan serial actress Neha Gowda’ s real love story Tamil News: பாவம் கணேசன் சீரியல் நடிகை நேகா கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் சாந்தனை திருமணம் செய்து கொண்டார்.
Vijay tv Paavam Ganesan serial actress Neha Gowda’ s real love story Tamil News: பாவம் கணேசன் சீரியல் நடிகை நேகா கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் சாந்தனை திருமணம் செய்து கொண்டார்.
Neha Gowda Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களுள் ஒன்றாக 'பாவம் கணேசன்' சீரியல் உள்ளது. விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் நவீன் முரளிதர் மற்றும் நேகா கவுடா ஹீரோ - ஹீரோயினாக நடிக்கின்றனர். 15 வருடங்களாக காதலித்து வரும் குணா மற்றும் கணேசனின் சுவாரசியமான காதல் கதை தான் சீரியலின் மைய கதை.
Advertisment
இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நவீன் முரளிதரனை அறியாதவர்களே இருக்க முடியாது. சின்னத்திரையில் ஷோக்களில் பிரபலமானவர். மற்றும் விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' ஷோவில் ஒரு கலக்கு கலக்கியவர்.
Advertisment
Advertisements
ஆனால், ஹீரோயின் நேகா கவுடாவை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.நேகா, பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இருந்தே தியேட்டர் நாடக கலைஞராக நடிக்க துவங்கினார். இவரது தந்தை கன்னட திரையுலகில் மேக்கப் கலைஞராக பணியாற்றியவர்.
நேகா ஒரு கன்னட நிகழ்ச்சி மூலம் தான் முதன்முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார். இது அவரை தென்னிந்திய அளவில் பிரபலமாக்கியது. தொடர்ந்து அவர் தமிழ் சின்னத்திரையில் பிரபல சீரியலில் காலடி எடுத்து வைத்தார்.
நேகா கடந்த 2018ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான நடிகர் சாந்தனை திருமணம் செய்து கொண்டார். கன்னட சின்னத்திரையில் பிரபல ஜோடியாக வலம் இவர்கள், கடந்த நவம்பர் மாதம் முடிவடைந்த ராஜா ராணி ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றனர்.
திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் வசித்துவரும் இந்த ஜோடியின் காதல் கதை தற்போது வெளிவந்துள்ளது. இதை கன்னட கலர்ஸ் டிவியில் நடந்த நடன ரியாலிட்டி ஷோவில் இருவரும் கலந்து கொண்ட போது வெளிப்படுத்தியுள்ளனர்.
நேகா -சாந்தன் ஜோடி 10ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே நல்ல நண்பர்களாம். பள்ளியில் தொடங்கிய இந்த நட்பு கல்லூரி வரை நீடித்ததுள்ளது. விரைவிலே நல்ல நண்பர்கள் காதலர்களாக மாறினர். இதில், முதலில் சாந்தன் தான் நேகாவிடம் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். தொடர்ந்து இவர்களின் காதல் திருமணமும் அரங்கேறியுள்ளது. இந்த ஜோடி தற்போது 10 வருடங்களுக்கும் மேலாக இணைபிரியாமல் வசிக்கின்றனர்.