ரூ 2 லட்சம்... அதில் ஒரு லட்சம் செக்; பாட்டு எழுத கவிஞர் வாலி போட்ட ஒரே கண்டிஷன் இதுதான்!

சினிமா ரசிகர்கள் பலராலும் விரும்பப்பட்டவர் கவிஞர் வாலி. தனித்துவமான பாடல்கள் மூலம் ரசிகர்களை தன்வசிப்படுத்தியிருந்த அவர், பாடல் எழுதுவதில் கடைப்பிடித்த ஒரே ஒரு விதிமுறை குறித்து நெல்லை ஜெயந்தா நினைவு கூர்ந்துள்ளார்.

சினிமா ரசிகர்கள் பலராலும் விரும்பப்பட்டவர் கவிஞர் வாலி. தனித்துவமான பாடல்கள் மூலம் ரசிகர்களை தன்வசிப்படுத்தியிருந்த அவர், பாடல் எழுதுவதில் கடைப்பிடித்த ஒரே ஒரு விதிமுறை குறித்து நெல்லை ஜெயந்தா நினைவு கூர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Kavignar vaali3

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி, தனுஷ், சிம்பு காலம் வரை பல தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல் எழுதியவர் கவிஞர் வாலி. தனது தனித்துவமான பாடல் வரிகளால் ரசிகர்களை கவர்ந்து இழுத்திருந்தார்.

Advertisment

இப்படி எண்ணிலடங்காத பாடல்கள் எழுதிய வாலி,  தான் பாடல் எழுதுவதற்கு ஒரேயொரு கண்டிஷன் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு விதித்திருந்ததாக, அவருடன் நெருக்கமாக பழகிய நெல்லை ஜெயந்தா தெரிவித்துள்ளார். 

அதன்படி, பாடல் எழுதுவதற்கு ரூ. 2 லட்சத்தை வாலி சம்பளமாக பெற்றதாக நெல்லை ஜெயந்தா தெரிவித்துள்ளார். அதிலும், ஒரு லட்ச ரூபாயை காசோலையாக மட்டுமே கொடுக்க வேண்டுமென தயாரிப்பாளர்களிடம் வாலி சொல்லி விடுவாராம். 

அவ்வாறு காசோலையாக பெறப்பட்ட தொகையை தனது மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்து, அதன் வட்டியை அத்தியாவசிய தேவைகளுக்கு செலவளிக்க வேண்டுமென்ற கொள்கையுடன் வாலி வாழ்ந்ததாக நெல்லை ஜெயந்தா கூறியுள்ளார். தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் சொத்துகள் வாங்கி குவிக்க வேண்டுமென்ற பழக்கம் இருக்கும் மனிதர்களிடையே, வாலி மட்டுமே இவ்வாறு மாற்றுக் கருத்துடன் இருந்ததாக நெல்லை ஜெயந்தா தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

மேலும், வாலியின் இந்த கண்டிஷனால் சில பெரிய நிறுவனங்களுக்கு அவர் பாடல்கள் எழுதவில்லை எனவும் நெல்லை ஜெயந்தா நினைவு கூர்ந்துள்ளார். 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

kavignar vaali Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: