180 பக்க புத்தகம், விடாமல் 4 முறை படித்து‌ ஹீரோவான நெப்போலியன்; எந்தப் படம் தெரியுமா?

'சீவலப்பேரி பாண்டி' திரைப்படம் நடிகர் நெப்போலியனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. குணச்சித்திர நடிகராக இருந்த அவரை, ஒரு கதாநாயகனாக உயர்த்தி, அவரது சினிமா வாழ்க்கையை முழுமையாக மாற்றியது.

'சீவலப்பேரி பாண்டி' திரைப்படம் நடிகர் நெப்போலியனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. குணச்சித்திர நடிகராக இருந்த அவரை, ஒரு கதாநாயகனாக உயர்த்தி, அவரது சினிமா வாழ்க்கையை முழுமையாக மாற்றியது.

author-image
WebDesk
New Update
nepolean

180 பக்க புத்தகம், விடாமல் 4 முறை படித்து‌ ஹீரோவான நெப்போலியன்; எந்தப் படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் வாழ்க்கை பாதையை மாற்றியமைத்த திரைப்படங்கள் சில உண்டு. அப்படி, குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட நெப்போலியனை, நாயகனாக உயர்த்தி, அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால், அது 1994-ல் வெளியான 'சீவலப்பேரி பாண்டி'தான். 

Advertisment

ஜூனியர் விகடனில் தொடராக வந்திருந்த ஒரு கதையை பட இயக்குநர் பிரதாப் கே.போத்தன் 1994- ம் ஆண்டு சீவலப்பேரி பாண்டி என்ற பெயரில் படமாக எடுத்திருந்தார். இந்தப் படத்தில் நெப்போலியன், சரண்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். சீவலப்பேரி பாண்டி  என்ற கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்து அசத்தியிருந்தார். உண்மையாலுமே வாழ்ந்த சீவலப்பேரி பாண்டியன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. 

நெப்போலியன் என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு கதாபாத்திரம், "சீவலப்பேரி பாண்டி". அந்தப் படம், நடிகர் என்ற முறையில் அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றியமைத்தது. நெப்போலியன் தன் நடிப்பு வாழ்க்கையில் அத்தனை பெரிய வெற்றியைப் பெற, ஒரு 180 பக்க புத்தகமே காரணம் என்றால் நம்புவீர்களா?

சீவலப்பேரி பாண்டி: ஒரு நிஜ வாழ்க்கை கதை

1994-ல் வெளியான 'சீவலப்பேரி பாண்டி' திரைப்படம், தென் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு நிஜமான மனிதரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அந்தப் படத்தின் கதாநாயகனாக நெப்போலியனைத் தேர்ந்தெடுத்தபோது, இயக்குனர் பிரதாப் கே. போத்தன், நெப்போலியனிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அது, சீவலப்பேரி பாண்டி பற்றிய 180 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை முழுமையாகப் படித்து, அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

Advertisment
Advertisements

seevalapperi pandi

4 முறை படித்த ரகசியம்

நெப்போலியன், இயக்குனரின் அறிவுரையை ஏற்று, அந்தப் புத்தகத்தை சாதாரணமாகப் படிக்கவில்லை. ஒரே மூச்சில் 4 முறை படித்தார். ஒரு கதாபாத்திரம் நிஜ வாழ்க்கையில் எப்படி வாழ்ந்தது, எப்படி பேசும், அதன் கோபங்கள், சந்தோஷங்கள், அதன் தனிப்பட்ட குணங்கள் என அனைத்தையும் அந்தப் புத்தகத்தின் மூலம் மிகத் துல்லியமாகப் புரிந்துகொண்டார். அதன் விளைவாக, அவர் திரையில் சீவலப்பேரி பாண்டியாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்.

வெற்றிக்கு வித்திட்ட நடிப்பு

படம் வெளியானதும், அது தனித்துவமான திரைப்படமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது. நெப்போலியனின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. குறிப்பாக, ஒரு அப்பாவி கிராமத்து இளைஞன், பின்னர் சூழலால் ஒரு குற்றவாளியாக மாறி, இறுதியில் மக்களின் காவலனாக உயர்ந்து, பின்னர் மரண தண்டனையை எதிர்கொள்ளும் அந்த உணர்ச்சிகளை அவர் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

கண்டிப்பா National award வரும் னு எதிர்பாத்தோம் - Napoleon #napoleoninterview

கண்டிப்பா National award வரும் னு எதிர்பாத்தோம் - Napoleon #napoleoninterview #napoleonabouthismovie #chithralakshmanan #TouringTalkiesinterview

Posted by Chithra Lakshmanan on Friday, September 19, 2025
Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: