/tamil-ie/media/media_files/uploads/2019/05/ngk-surya-cut-out-has-been-removed.jpg)
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் என்.ஜி.கே திரைப்படம் நாளை வெளியாகிறது.
இயக்குநர் செல்வ ராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு இதனை தயாரித்திருக்கிறார். அரசியல் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
சூர்யா படம் வெளியாகி மிகுந்த நாட்களாகிவிட்டதால், என்.ஜி.கே படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் இந்தப் படத்திற்காக 215 அடியில் பிரமாண்ட கட் அவுட் தயார் செய்யப்பட்டது. இதனை திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர்கள் 6.50 லட்சம் செலவில் உருவாக்கினார்கள்.
நாளை வெளியாக இருக்கும் என்.ஜி.கே திரைப்படத்தை கொண்டாடும் விதமாக திருத்தணி புறவழிச்சாலையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் சூர்யாவின் 215 அடி உயர பிரமாண்ட கட் அவுட் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த காரணத்தால் அகற்றப்பட்டுள்ளது. #NGK#Suryapic.twitter.com/7taGOajhEE
— IE Tamil (@IeTamil) 30 May 2019
இந்நிலையில் முறையாக அனுமதி பெறாமல் கட் அவுட் வைத்திருந்த காரணத்தினால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அந்த கட் அவுட் அகற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.