சாரு ரிஷி, முன்னாள் பத்திரிகையாளர்,
Gandhi 150th birth anniversary in Nigeria a Musical Play: அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரல்களுடன் கொண்டாட இந்தியா தயாராக உள்ள நிலையில், ஆப்பிரிக்க நாடானா நைஜீரியாவில், ஒரு உள்ளூர் நாடக குழு ஆறு மாத விழாவுடன் இந்த நிகழ்வை நினைவுகூரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
லைட்இயர் புரொடக்ஷன்ஸ் இந்த நிகழ்வை “காந்தி: தி மியூசிகல்” என்று கொடியசைத்து தொடங்கியுள்ளது. லாகோஸில் நீண்ட ஈத் வார இறுதியில் எட்டு நிகழ்ச்சிகளை நடத்தியது. அல்லது அது இங்கு ‘பார்கா டா சல்லா’அதாவது ‘நல் பிரார்த்தனை’என்று அறியப்படுகிறது. இந்த விழாவில் ஒரு கருத்தரங்கு, ஒரு கலை கண்காட்சி, இந்தோ-ஆப்பிரிக்க பேஷன் ஷோ மற்றும் சிபோக் சிறுமிகளுக்கான அணிவகுப்பு ஆகியவை இடம்பெறவிருந்தன.அத்தகைய தனித்துவமான திட்டமாக இருந்தபோதிலும், “காந்தி: தி மியூசிகல்” தயாரிப்பாளர்கள் நிதிக்காக போராடுகிறார்கள். ஒரு சில கார்ப்பரேட்டுகள் மற்றும் தனிநபர்கள் ஆதரவளிக்க வந்தாலும், எட்டு நிகழ்ச்சிகளையும் சுமுகமாக அரங்கேற்ற இது போதாது. இந்திய தூதரக உயர் அதிகாரிகளுடன் லாகோஸ் மக்களின் இசை கவர்ந்த பிறகு சர்வதேச அகிம்சை தினத்தன்று மீண்டும் நிகழ்ச்சியை நடத்த நாடகக் குழு அழைக்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி அதற்கும் திரைச்சீலைகள் போடக்கூடும்.
“நாங்கள் பின்வாங்க மாட்டோம். திட்டத்தின்படி விஷயங்கள் செல்லவில்லை என்றாலும், நாங்கள் அதை மறுபரிசீலனை செய்வோம். அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சிப்போம். கார்ப்பரேட்டுகளை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நாங்கள் மீண்டும் அணுகுவோம். இதனால், அவர்கள் அடுத்த நிதி ஆண்டு திட்டத்தில் எங்களுக்காக சிறிது நிதியை ஒதுக்க முடியும்,” என்று லைட்இயர் புரொடக்ஷன்ஸின் நிறுவனரும் திட்ட வடிவமைப்பாளருமான ஓவோசா பிரிசியஸ் ஓரோய் கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Gandhi-Nigeriya-play-300x200.jpg)
ஆனாலும், நாடகத்தைப் பற்றி பேசும்போது ஓரோயின் கண்கள் பிரகாசமடைகின்றன. “நைஜீரியர்கள் காந்தியைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், அவர்கள் பொழுதுபோக்கை விரும்புகிறார்கள். அதனால்தான், அவரது கதையை இசை வடிவமாக மாற்றுவது மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது” என்று அவர் தெரிவித்தார். நைஜீரியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 60 நாடகக் கலைஞர்களைக் கொண்ட குழுவால் வண்ணமயமான இசை அமைக்கப்பட்டது. அவர்களின் இனம் மற்றும் இனத்தை மறந்து, குழுவாக ஒன்று கூடி மகாத்மா காந்தியின் வாழ்க்கையையும் போதனைகளையும் கொண்டாடியது.
“தேவா ஸ்ரீ கணேஷா” மற்றும் “ஏ மேரே வதன் கே லோகன்(என்னுடைய நாட்டின் மக்களே!)” போன்ற பாடல்களால் நிரம்பிய இந்த இசை, அவர் தென்னாப்பிரிக்காவில் ஒரு ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டது, மேற்கத்திய ஆடைகளை எரித்தது மற்றும் ஜாலியன்வாலாபாக் படுகொலையின் அதிர்ச்சி ஆகிய காந்தியினுடைய வாழ்க்கையின் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சிறப்பித்துக்காட்டியுள்ளது. அழகான இசை, பாவனை செய்ய முடியாத நடன நகர்வுகள் மற்றும் மின் விளக்குகளின் மாயாஜாலம் ஆகியவற்றைக் கொண்டு பார்வையாளர்கள் மூழ்கியிருப்பதை உறுதிசெய்யும் போது, இது அவரது வாழ்க்கையின் சாரத்தைப் பெறுகிறது.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியின் ரகசியம், நடிகர்கள் தங்கள் கதாபாத்திரங்களுடன் தங்களை தொடர்புபடுத்தக்கூடியதாக இருக்கலாம். “நான் காந்தியுடன் மிகவும் நெருக்கமாக உணர்கிறேன். அவர் சாதிகள் மற்றும் மதங்களுக்கு இடையில் வேறுபாடு காட்டவில்லை. நான் ஒரு கலப்புத் திருமணம் செய்துகொண்ட குடும்பத்திலிருந்து வந்தவன். சமத்துவத்தின் அர்த்தத்தை நான் புரிந்துகொள்கிறேன்.” என்று மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் முக்கிய பாத்திரத்தில் நடித்த மோஷூத் ஃபத்தா கூறினார்.
மற்ற மேடை கலைஞர்கள் அனைவரும் நைஜீரியர்களாக இருந்தபோதிலும், இந்திய தாயும் மகளுமான பால்னா மற்றும் எட்டு வயது வைதேகி பாரிக் ஆகியோர் நம்பிக்கையுடன் முன்னோக்கி வந்துள்ளனர். "வைதேகி பாடுவதை விரும்பியதால் நான் ஆடிஷனுக்குச் சென்றேன். அங்கே அவர்கள் என்னை இதில் வேலை செய்ய ஆர்வமாக உள்ளீர்களா? என்று கேட்டார்கள்... நான் நடனமாடுவதை விரும்புகிறேன். கர்பா குழுவில் ஒரு அங்கமாக இருந்தேன்… நைஜீரியர்கள் நம் தேசத்துக்காக இவ்வளவு செய்ய முடியுமென்றால், அதை முயற்சித்துப் பார்க்க முடியும் என்று நான் நினைத்தேன்.”என்று அவர் தெரிவித்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/10/Gandhi-Nigeria-300x200.jpg)
இசையமைப்பாளர் டென்னியோலா ஓவாய் மற்றும் அவரது நட்சத்திர பாடகர் ஃபவாஸ் ஓய்போட் ஆகியோரால் இசை அமைக்கப்பட்டுள்ளது. “நாங்கள் இந்திய பார்வையாளர்களையும் எதிர்பார்த்திருந்ததால் உச்சரிப்பு சீட்டுகளை வைத்திருக்க முடியாது என்பதால் நாங்கள் தடுமாறும்போது பால்னா உதவி செய்பவராக இருந்தார்” என்று ஓவாய் கூறினார். ஒரு குழல் இயக்குநராக தனது இசைக்கலைஞர்களையும் பாடகர்களையும் தொடர்ந்து பயிற்சி செய்ய வைத்தார். “இது கடினமாக இருந்தது. குறிப்பாக எங்களுக்கு புரியாத மொழியில் பாடல்களைப் பாடுவது. ஆனால், கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. ஆரவாரமான கூட்டம் ஒரு ஆசீர்வாதமாக இருந்தது”என்று ஓய்போட் கூறினார்.
ஓரோய் இப்போது கூட்டத்தில் நிதியளிப்பதைப் பார்க்க விரும்புகிறார். “காந்தியின் விழுமியங்கள் மற்றும் போதனைகள், நமது சமூகத்தை பாதிக்கும் பல்வேறு சிக்கல்களைச் சமாளிப்பதற்கும், நமது மதிப்பீடுகளை மாற்றியமைக்கவும், அமைதியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் மற்றும் அஹிம்சையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விரும்பினால் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன.”