பழைய பாணி Vs புதிய பாணி: ஆடம்பரம் இல்லாத இனிமையான காதல்: நீக் படம் விமர்சனம்!

தனுஷ் இயக்கத்தில் 3-வது படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா?

author-image
WebDesk
New Update

பா.பாண்டி, படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் அடுத்து ராயன் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். தற்போது தனது இயக்கத்தில் 3-வது படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

Advertisment

Read In English: Nilavukku Enmel Ennadi Kobam Movie Review: A pleasant no-frills love story that mixes old school with new cool

பொதுவாக காதல் நகைச்சுவைப் படங்களில், பெரும்பாலும், எல்லாமே தேர்வை பொறுத்தது. ஹீரோ/ஹீரோயின் காதலிக்க சரியான நபரை தேர்வு செய்கிறார்களா? அந்த நபர் சரியான நேரத்தில் அவர்களை நேசிக்கிறாரா? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் காதல் கதைகளை ஏற்றுக்கொள்ளத் தேர்வு செய்கிறார்களா? தம்பதியினர் தங்களுக்கு வரும் மற்ற எல்லா கவனச்சிதறல்களையும் விட அன்பைத் தேர்வு செய்கிறார்களா? என்பதே அவர்கள் அனைவரின் மிக முக்கியமான கேள்வி.

அதேபோல், படத்தின் எழுத்தாளர் சரியான ஹீரோ/ஹீரோயினுடைய நண்பரைத் தேர்ந்தெடுக்கிறாரா? என்ற கேள்வியும் இருக்கிறது. இதில் சந்தானம் பல படங்களில் இந்தக் கேரக்டரை முழுமையாக நடிப்பதைப் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில், தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில், இந்த வேலையை மேத்யூ தாமஸ் செய்கிறார், அவர் ராஜேஷ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் ஒரு பொதுவான பெயரைக் கொண்ட ஒரு பொதுவான மனநிலையைக் கொண்ட ஒரு பொதுவான நண்பராக நடிப்பில் அசத்தியுள்ளார்.

Advertisment
Advertisements

ஆனால் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷ் சரியாகச் சொல்வது இதுவல்ல. அவர் ஜி.வி.பிரகாஷ் குமாரை சிறந்த வடிவத்தில் காட்டுகிறார். படத்தின் கதைக்களம் சமூகத்தின் உயர் மட்டத்தில் நடக்கும் காதல் கதை. இந்த படத்திற்கு, ஹீரோ ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் கூட, ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ அவரை ஒரு பளபளப்பான தோற்றத்திற்கு மாற்றும் வகையில் படமாக்கியுள்ளார். தனுஷ் நடிகர்களை அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு நடிக்க வைக்கிறார். அவர்கள் விருப்பத்திற்கு, நடிக்க போதுமான அளவு இடம் கொடுத்துள்ளார். இதில் மேத்யூ தாமஸைத் தவிர, பலரும் முற்றிலும் மாறுபட்ட லீக்கில் செயல்படுகிறார்.

publive-image

படத்தின் கதை மிகவும் எளிமையானது .பிரபு (பவிஷ்) என்ற ஒரு பையனும், நிலா (அனிகா) என்ற ஒரு பெண்ணும் உள்ளனர். பிரபு ஒரு சமையல்காரன், நிலா ஒரு உணவுப் பிரியர். இருவரும் காதலிக்கிறார்கள். பின்னர், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக, அவர்கள் காதலில் இருந்து விலகுகிறார்கள். இப்போது, பிரீத்தி (பிரியா பிரகாஷ் வாரியர்) என்ற பெண், இருக்கிறாள். பையன் இன்னும் ஒரு சமையல்காரன், அந்தப் பெண் ஒரு இல்லத்தரசியாக இருக்க விரும்புகிறாள். அவர்களுக்கு ஒரு கடந்த காலம் இருக்கிறது; அவர்கள் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள்.திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள்.

பின்னர் ஒரு குறிப்பிட்ட காரணத்தால், அந்த பையன் தனது முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொள்ள முடிவு செய்கிறான். அதன்பிறகு, பழைய தீப்பிழம்புகள் மீண்டும் பற்றி எரிந்ததா? புதிய தீப்பிழம்புகள் அனைந்ததா? என்ன நடந்தது என்பதை வழக்கமான காதல் கதையுடன் சொல்லும் படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். பவிஷ், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன், வெங்கடேஷ் மேனன், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் சித்தார்த்த சங்கர் என பலரும் சிறப்பான நடிகத்துள்ளனர்.

மூத்த நட்சத்திரங்களான சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் நரேன் போன்ற நடிகர்கள் இருப்பதால், படம் மேலும் வலுவடைகிறது, அவர்கள் தங்கள் கேரக்டர்களுக்கு நியாயம் சேர்க்கின்றனர். பல ஆண்டுகளாக படங்களில் நாம் பார்த்த மிகவும் வழக்கமான காட்சிகளில் சில படத்தில் இருக்கின்றன. படத்தை எழுதி இயக்கிய தனுஷ், தனது புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து பல குறிப்புகளை தாராளமாகப் பயன்படுத்தியுள்ளார். மேத்யூவின் ரிங்டோன் வேலையில்லா பட்டாதாரியின் 'ஊதுங்கடா சங்கு', அவருடைய நாய்க்கு ஹாரி பாட்டர் என்று பெயர்.

இளையராஜா-ஏ.ஆர்.ரஹ்மான் விவாதத்திற்கு ஒரு சிறிய சுவாரஸ்யமான குறிப்பு படத்தில் உள்ளது. நாம் விரும்பும் தனுஷ் படங்களிலிருந்து மேதைமை, நட்பு, திரிபுபடுத்தப்பட்ட காதல் மற்றும் குடும்பம் பற்றிய வரிகள் நேரடியாக வருகின்றன. படத்தின் வசனங்கள் அவ்வளவு மறக்கமுடியாதவை, மேலும் படம் வலியை வெளிப்படுத்தும் ஒரு சோகமான காதலாக இருக்கக்கூடாது என்பதால் அது அப்படி வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. உண்மையில், படம் முழுவதும் ஒரு லேசான மனப்பான்மை உள்ளது, சோகம், வேதனை மற்றும் வலி இருந்தாலும், இங்கே நமக்கு ஒரு வளைந்த புன்னகையும், முழு சிரிப்பும் இருக்கிறது, ஏனென்றால் தனுஷ் திரைக்கதையில் சோகத்தை அவ்வளவு பெரிதாக காட்டவில்லை.

படத்தின் மையத்தில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இன்னும் 20களின் முற்பகுதியில் உள்ளவர்களைப் பற்றிய கதையாக இருக்கிறது. கிட்டத்தட்ட தனுஷ் சொல்வது போல் இந்த காதல் கதைகள் அவர்களுக்கு உலகமாகத் தோன்றலாம், ஆனால் யதார்த்தம் மிக விரைவில் வித்தியாசமாகிவிடும். இந்த அலட்சிய மனப்பான்மை சிறிது நேரத்திற்குப் பிறகு படத்திற்கு ஒரு பெரிய அசௌகரியமாக மாறுகிறது, ஏனெனில் வேடிக்கையான நிகழ்ச்சியை முடிக்க வேண்டிய நேரம் வரும்போது, தனுஷ் அவசரப்படத் தொடங்குகிறார்.

படத்தில் ஏற்கனவே காதல் கதை அதிகமாக இருப்பதால், அவர் மேலும் ஒரு கதையை கொண்டு வருகிறார், இது முக்கியமாக கதையை மேலும் மேம்படுத்துவதற்காக உள்ளது. இந்தக் கோணத்தில் ஒரு சுவாரஸ்யமான அம்சம் இருந்தாலும், ஒரு காதல் முடிவுக்கு ஒரு வழியாக உணர்கிறது, மேலும் அந்த முடிவு மிகவும் செயற்கையாக இருப்பதால், கவனம் ஈர்க்க கடினமாக உள்ளது. கூடுதலாக, பிரபு மற்றும் ராஜேஷிடம் ஒரு குறிப்பிட்ட ரகசியம் எப்படி காப்பாற்றப்படுகிறது என்பது பற்றிய இரண்டாம் பாதி முழுவதும், மற்ற முக்கிய கேரக்டர்களை அது அடையும் விதம், ஒரு பரிசை அழகாக முடிப்பதற்கான ஒரு சிறந்த நிகழ்வாக உள்ளது.

படம் சில இடங்களில் தோய்வை நோக்கி செல்லும்போதெல்லாம், மேத்யூ தாமஸின் ராஜேஷ் அதை காப்பாற்ற விரைந்து செல்கிறார், மேலும் படம் அவரைச் சுற்றி இருக்கும்போதெல்லாம், சிறப்பாக இருக்கிறது. அதே சமயம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம், பவிஷ், அனிகா, ரபியா, ரம்யா மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் கூட்டணியிலும் இருக்கிறது. பவிஷ் நடனமாட முடியும், அழகாகத் தெரிகிறார், வேடிக்கையாக இருக்க முடியும், முற்றிலும் முட்டாள்தனமாக இருக்க முடியும், தனது புன்னகையாலும் நடத்தையாலும் நம் இதயங்களுக்குள் நுழைய முடியும் என்று நமக்குக் காட்டப்படுகிறது. அவர் முற்றிலும் நம்பத்தகுந்தவரா என்றால் உண்மையில் இல்லை, அதேபோல் அனிகா தனது புன்னகையாலும் நடத்தையாலும் நம் இதயங்களுக்குள் நுழைய முடியும் என்று நமக்குக் காட்டப்படுகிறது. அவள் முற்றிலும் நம்பத்தகுந்தவரா என்றால் உண்மையில் இல்லை, ஆனால் அவள் அங்கு செல்வாள், ஏனென்றால் திறமை ஒரு குழந்தை நட்சத்திரமாக கடந்த கால கேரகடர்களின் சுமையை விட அதிகமாக இந்த படத்தில் இருக்கிறது.

publive-image

படத்தில் மிகவும் குறிப்பிட்ட கேரக்டர்களில் நடிக்க வேண்டிய மற்றவர்களுக்கும் இது பொருந்தும், மேலும் அவர்கள் அதை ஓரளவுக்குச் செய்கிறார்கள். இறுதியில் ரபியாவின் கேரக்டருக்கு ஒரு அரிய பாதிப்பு தருணம் உள்ளது, மேத்யூவின் கேரக்டருக்கு சரியான படமாக வெங்கடேஷ் பயன்படுத்தப்படுகிறார். ரம்யா தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். அடிப்படையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம், தமிழ் சினிமாவுக்கு நடிக்க, நடனமாட, உணர்ச்சிவசப்பட, திரையில் நம்ப வைக்கும் புதிய நடிகர்களை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தளவு வாய்ப்புகள் உருவாகின்றன என்பது யாராலும் யூகிக்க முடியும், ஆனால் தமிழ் சினிமாவில் இப்போது இளம் நடிகர்கள் இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.

இந்தப் படத்தில் வித்தியாசமான காதல் கதையைத் தொடும் இயக்குனர் தனுஷுக்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ஒரு வித்தியாசமான வகை. அவர் தனது முதல் படமான பா பாண்டியில் காதல் மற்றும் முதிர்ந்த காதலை மலரச் செய்துள்ளார். இயக்குனராக தனது 2-வது படமான ராயன் படத்தில் இளமையாகவும் வெட்கமில்லாத காதலையும் செய்துள்ளார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில், இளமையாகவும் வெட்கமில்லாத காதலையும் செய்துள்ளார். தனுஷ் இந்த வகையை ரசிக்கிறார், சரி, தவறு என்ற எல்லைகளை கடந்து, உண்மையில் ஒரு முழு வீச்சில் செல்லவில்லை.

செல்வராகவன் படங்களை போல், தனுஷ் தனது படத்தில், ஆழமாகச் செல்வதில்லை, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் செல்வாவின் படம் அல்ல... இது தனுஷ் படம். மேலும், பாராட்டுகள் ஒரு அற்புதமான வாக்குறுதியுடன் வெளிவரும்போது, தனுஷ் இந்த வகையின் ஸ்டீரியோடைப்களை விரும்புகிறார் என்பதையும், அவர் தனது கதாபாத்திரங்களை விரும்புகிறார் என்பதையும் ஒருவர் புரிந்துகொள்கிறார். ஆனால் அவரது திரைப்பட வரலாற்றைக் கருத்தில் கொண்டால், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகவும் நன்றியுள்ள கேரக்டராக ஹீரோவின் நண்பருக்கு கிட்டத்தட்ட அர்ப்பணிப்பு செய்யும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

Dhanush

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: