3 சகோதரி நடிகைகளுடன் ஜோடி போட்ட பிரபல நடிகர்: கண்டிப்பா ரஜினி, கமல் இல்ல: கண்டுபிடிங்க பார்ப்போம்!

ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 3 சகோதரிகளுடனும் ஒரு முன்னணி நடிகர் ஒருவர் ஜோடியாக நடித்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 3 சகோதரிகளுடனும் ஒரு முன்னணி நடிகர் ஒருவர் ஜோடியாக நடித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Jyothika Roshini and Nagma

திரைத்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகளுடன் இணைந்து ஒரு நடிகர் நடித்துள்ளார். திரைத்துறையில் சகோதரிகள், நடிகைகளாக வருவதும், அவர்கள் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதும் வழக்கமான ஒரு நிகழ்வு தான். அதேபோல் ஒரே குடும்பத்தில் இருந்து வந்த 3 சகோதரிகளுடனும் ஒரு முன்னணி நடிகர் நடித்துள்ளார். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல, பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தான்.

Advertisment

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நக்மா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், 1990-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான பாஹி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 1994-ம் ஆண்டு வெளியான ஷங்கரின் காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக, அஜித் நடிப்பில் சிட்டிசன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

நக்மாவுக்கு ஒன்றுவிட்ட சகோதரி தான் ஜோதிகா. இந்தி படத்தில் அறிமுகமான இவர், அஜித்தின் வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து அஜித் சூர்யா, விக்ரம் விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுததார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Chiranjeevi Requests Rajini and Kamal

Advertisment
Advertisements

ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரிதான் ரோஷ்னி. 1997-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான சிஷ்யா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரோஷ்னி. இவர் தான் நடிகை ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி. சிஷ்யா படத்திற்கு பிறகு மாஸ்டர் என்று தெலுங்கு படத்திலும், குலாபி என்ற கன்னட படத்திலும் ரோஷ்னி நடித்திருந்தார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான துள்ளி திரிந்த காலம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நக்மா, ரோஷ்னி இருவரும் திரைத்துறையில் இருந்து விலகிவிட்ட நிலையில், ஜோதிகா மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். 1992-ம் ஆண்டு நக்மா நடிகர் சிரஞ்சீவியுடன் க்ரான மொஹடு, ரிக்சாவோடு, மூன்று மொனகல்லு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான ரமணா படத்தின் ரீமேக்கான தாகூர் படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோதிகா இணைந்து நடித்துள்ளார். அவரது அக்கா ரோஷ்னி, மாஸ்டர் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chiranjeevi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: