/indian-express-tamil/media/media_files/q7CfPSp6UnK6yDmpNXzY.jpg)
பா. ரஞ்சித்தின் செயல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Pa Ranjith |தமிழ் சினிமா திரையுலகில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பா. ரஞ்சித். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களை இயக்கியிருந்தார்.
இந்த இரண்டு படங்களும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில், கபாலி மற்றும் காலா படங்களில் உள்ள அரசியலை ரஜினிகாந்த் புரியாமல் நடித்து கொடுத்தாரா? என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு சிரித்துக் கொண்டே பா. ரஞ்சித், அருகில் இருந்து வாட்டர் கேனை எடுத்து தண்ணீரை அருந்துகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகிறார். அதில், “ரஜினிகாந்த் புரியாமல் நடித்துக் கொடுக்கவில்லை.
நீங்கள் தான் நன்றி மறந்துவிட்டீர்கள் பா. ரஞ்சித் என சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டிவருகின்றனர். கபாலி, காலா ஆகிய இரண்டு படங்களிலும் உழைக்கும் மக்களின் அரசியலை பேசி ரஜினிகாந்த் நடித்திருப்பார்.
இந்த இரண்டு படங்களும் ரஜினிகாந்துக்கு ஹிட் படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.