பாட்டு பிடிச்சிட்டா குழந்தை மாதிரி, பிடிக்கலனா கிழிச்சிருவாரு; வித்யாசாகர் பற்றி மனம் திறந்த பா.விஜய்!

இசையமைப்பாளர் வித்தியாசாகர் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் மனம் திறந்துள்ளார்.

இசையமைப்பாளர் வித்தியாசாகர் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vidhyasakar

பாட்டு பிடிச்சிட்டா குழந்தை மாதிரி, பிடிக்கலனா கிழிச்சிருவாரு; வித்யாசாகர் பற்றி மனம் திறந்த பா.விஜய்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் வித்தியாசாகர். பல ஹிட் பாடல்களை கொடுத்து கவனம் ஈர்த்தவர். இசையமைப்பாளர் வித்தியாசாகரின் இசை இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. 

Advertisment

இவர் விஜய், ரஜினி, கமல் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் வித்தியாசகர் இசை அமைப்பது மட்டுமல்லாமல் பாடல்களும் பாடியுள்ளார். ஒரு பாடலின் வரிகள் தனக்கு பிடித்துவிட்டது என்றால் அந்த பாடலை அவர் பாடுவாராம். அப்படி வித்தியாசாகர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

அந்த வகையில் சிம்புதேவன் இயக்கிய 'அறை எண் 305-ல் கடவுள்’ திரைப்படத்தில் ‘காதல் செய்’ என்கிற பாடலை பாடி இருப்பார். கடந்த 2008-ஆம் ஆண்டு கேபி ஜெகன் இயக்கத்தில் வெளியான ’ராமன் தேடிய சீதை’ படத்திற்கும் வித்யாசாகர் தான் இசையமைத்து இருந்தார். 

சேரன், பசுபதி, விமலா ராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தில்  இடம்பெற்றிருந்த ‘என்ன புள்ள செஞ்ச நீ’ என்கிற லவ் பெயிலியர் பாடல் மிகவும் ஹிட் ஆனது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் வித்யாசாகர் தான் தன் சொந்தக் குரலில் பாடி இருந்தார். 

Advertisment
Advertisements

அதேபோன்று, விஜய் - திரிஷா நடிப்பில் வெளியான ‘குருவி’ திரைப்படத்தில் சூப்பர் ஹிட்டான ‘பல்லானதே பல்லானதே’ பாடலை வித்தியாசாகர் பாடியிருந்தார். இப்பாடல் இன்றும் ரசிகர்கள் வைஃப் செய்யும் அளவிற்கு அமைந்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்று வித்தியாசாகரை ரசிகர்கள் கொண்டாடவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை தான்.

இந்நிலையில், இசையமைப்பாளர் வித்தியாசாகர் குறித்து பாடலாசிரியர் பா.விஜய் மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, ’'கிரீடம் படத்தில் இடம்பெற்றிருந்த ’டிங்டாங் கோயில் மணி’ தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடித்த பாடல். நான் எழுதிய பாடல்களில் எனது மனைவிக்கு ரொம்ப பிடித்த பாடல் அது. 

எங்களுக்கு என்ன ஒரு சந்தோஷம் என்றால் பாட்டை எழுதிவிட்டு பணம் வாங்குவதில் சந்தோஷம் கிடையாது. அதை இசையமைப்பாளர் வித்தியாசாகர் ரசிப்பதில் தான் சந்தோஷம். ஒரு பாடல் பிடிக்கவில்லை என்றால் வித்தியாசாகர் மாதிரி அதை யாரும் அவ்வளவு கேவலமாக பார்க்க முடியாது. பிடித்துவிட்டது என்றால் குழந்தை மாதிரி அதை ரசித்து கொண்டாடுவார்” என்றார்

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: