Advertisment

பாண்டியன் ஸ்டோர் 2; தங்கமயில் ரியல் கணவர் இவர்தான்; சரண்யா துராடியின் ரொமான்ஸ் பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்துக் வரும் நடிகை சரண்யா துராடி தன்னுடைய கணவரின் புகைப்படத்தை பதிவிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sharanya thuradi serves foods, Sharanya thuradi food delivery, actress sharany athuradi, நடிகை சரண்யா துராடி, சரண்யா துராடி, லாக்டவுன், கொரோனா, உணவு அளிக்கும் சரண்யா துராடி, Sharany Thuradi helps affected people, corona lockdown, covid 19

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தங்கமயில் சரண்யா துராடி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பையும் வெற்றியையும் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. 

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தில் நடித்தவர்களில், ஸ்டாலின், ஹேமா உள்ளிட்ட ஒரு சிலர்தான் இரண்டாவது சீசனில் நடிக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.  

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், தங்கமயில் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சரண்யா துராடி, தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிக் கவர்ந்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் நல்லவளா, கெட்டவளா, வில்லியா என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு குழப்பும் வகையில் சரண்யா துராடி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து வருகிறார்.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய சரண்யா துராடி, ‘ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி’,  ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என 2 படங்களில் நடித்திருக்கிறார். 

இதையடுத்து,  சின்னத்திரையில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய அவருக்கு நிறைய ரசிகர்கள் உருவானார்கல். இந்த சீரியல் முடிந்த பிறகு, சன் டிவியில் வெற்றி பெற்ற ரோஜா சீரியலின் தெலுங்கு மேக்கிங்கில் சரண்யா துராடி நடித்து வருகிறார். இந்த சீரியல் ஜெமினி டிவியில் ஒளிபரப்பானது. தொடர்ந்து, சன் டிவியில்  ‘ரன்’, தெய்வமகள் சீரியலில் நடித்தார். பிறகு, விஜய் டிவியில் ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அந்த சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால், அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது.

இந்தச் சூழலில், சரண்யா துராடி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் தங்கமயில் கதாபாத்திர்த்தில் கலக்கலாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் மாமனாரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்பதற்காக வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் தங்க மயில், வீட்டில் உள்ள மற்ற அனைவரைப் பற்றியும் மாமனாரிட போட்டுக்கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு, குடும்பத்தில் அவ்வப்போது குண்டைத் தூக்கிப் போடுகிறார். இதனால், ஏம்மா, நல்லவளா, வில்லியா என்று பார்வையாளர்கள் பலரும் புலம்புகிறார்கள்.

இந்நிலையில், நடிகை சரண்யா துராடி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழுத்தில் மஞ்சள் தாலியுடன் சரண்யா துராடி தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டு வருகின்றனர்.

சரண்யா துராடி தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள பதிவில்,  “என்னுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கும் சந்தோஷத்திற்கும் எப்போதும் துணையாக இருப்பது என்னுடைய கணவர் தான்” என்று கணவரை பாராட்டி உள்ளார். 

சரண்யா துராடிக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது. இதனால், பலரும் சரண்யா துராடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சரண்யா துராடி ராகுல் சுதர்சன் என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். ராகுல் சுதர்சன் ஒரு புகைப்படக் கலைஞர், தொழில் முனைவோர் என பன்முகம் கொண்டவர். அதே போல, பிட்னஸ் மீது அதிக அளவு ஆர்வம் கொண்டவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment