பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் 2 பாகத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர் வெங்கட் ரங்கநாதன், தனக்கு இரண்டாவதாக குழந்தை பிறந்ததாக அறிவித்திருக்கிறார். குழந்தையின் கை விரல்களை தான் வருடியபடி வெளியிட்டுள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சகோதர பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த சீரியலில், ஜீவா கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். இந்த சீரியலில் ஜீவா – மீனா தம்பதிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து. ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தபோது, ரசிகர்கள் பலரும் இந்த தம்பதியை அதிகம் மிஸ் செய்வதாக கூறியிருந்தனர்
இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்த சில நாட்களில் அந்த சீரியலின் 2-ம் பாகம் தொடங்கப்பட்டது. முதல் பாகம் சகோதர பாசம் என்றால் 2-ம் பாகம், தந்தை மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. முதல் பாகத்தில் மீனா கேரக்டரில் நடித்த நடிகையே மீண்டும் 2-ம் பாகத்தில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நிலையில், ஜீவாவாக முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன் முதலில் இந்த சீரியலில் நடிக்கவில்லை.
அதே சமயம் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விஜய் டிவியில் கிழக்கு வாசல் சீரியலிலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனாவுக்கு ஜோடியாக செந்தில் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் திடீரென விலகியதை தொடர்ந்து அந்த கேரக்டரில் வெங்கட் நடிக்க வந்தார். தற்போது, இப்போது மீனா – செந்தில் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
வெங்கட் ரங்கநாதன் அனுஜா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றார். இந்நிலையில் நேற்று இரவு வெங்கட்டுக்கு 2-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து வெங்கட் மகிழ்ச்சியாக தனது சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இதுவரைக்கும் வெளியிடாத நிலையில், சமீப காலமாகவே குடும்பத்துடன் வெளியில் சென்று வெளியிடும் புகைப்படங்களயும் தவிர்த்து வந்துள்ளார்.
தன்னுடைய சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்த வெங்கட், தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில்,குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.