Advertisment

சினிமாவில் மட்டுமல்ல சீரியலிலும் அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர் - பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை அதிர்ச்சி பேட்டி

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூன்றாவது முல்லையாக நடித்த நடிகை லாவண்யா, சீரியல் சான்ஸுக்குகூட அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு டார்ச்சர் செய்தார்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Lavanya 1

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தில் மூன்றாவது முல்லையாக நடித்த நடிகை லாவண்யா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தில் மூன்றாவது முல்லையாக நடித்த நடிகை லாவண்யா, சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடிக்கும் வாய்ப்புக்குகூட அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு டார்ச்சர் செய்தார்கள் என்று தான் சந்தித்த  அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னைகள் குறித்து அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

 ரசிகர்களை கவர்ந்த நடிகை லாவண்யாவும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை தான் எப்படி சந்தித்தேன் என்பதை சமீபத்திய பேட்டியில் மனவேதனையுடன் தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முதல் பாகத்தில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஜோடி என்றால் அது முல்லை - கதிர் ஜோடிதான். முதலில் முல்லையாக நடித்த வி.ஜே சித்ரா தற்கொலை செய்துகொண்டதால், அந்த கதாபாத்திரத்தில், நடிகை காவ்யா அறிவுமணி நடித்தார். அவருக்கு சினிமா வாய்ப்பு வந்ததால், அந்த சீரியலில் இருந்து விலகி, சினிமாவில்  நடிக்கச் சென்றார். இதனால், கடைசியாக முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார் நடிகை லாவண்யா. விரைவிலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில்தான், சீரியல் நடிகை லாவண்யா, சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் சீரியலில் நடிக்க வாய்ப்பு தேடியபோது, அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை சந்தித்தது குறித்த அதிர்ச்சி தகவலை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சிப்பிக்குள் முத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லாவண்யா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சீரியல்களில் நடிக்க தன்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி தொல்லை பண்ணாங்க, டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுதிட்டு நல்ல வேலைக்குப் போக நினைத்தேன். சினிமாவில் நடிக்க ஆசை வந்து அதில், முயற்சி செய்தேன். அங்கே பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சீரியலில் நடிக்கலாம் என்று பார்த்தால் இங்கேயும் அதே டார்ச்சர்.

ஆனால், அதெல்லாம் நமக்கு செட்டாகாது என ஒதுங்கியிருந்த போதுதான் திறமைக்கும் இங்கே சிலர் வாய்ப்பு கொடுப்பார்கள் என்பதை புரிந்துக் கொண்டேன். சிப்பிக்குள் முத்து சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு அப்படித்தான் வந்தது. இப்போது நல்லா சம்பாதித்து என்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன். பல நடிகைகள் குறுக்கு வழியில் போகாமல் நேர் வழியில் நடிக்கும் வாய்ப்புகளை பெற பல போராட்டங்களையும் தியாகங்களையும் கடந்து தான் வந்திருக்கின்றனர்” என்று நடிகை லாவண்யா தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment