விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் சகோதரர்களின் தாய் லட்சுமி அம்மாவாக நடித்து வந்த நடிகை ஷீலா, அந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரம் இறந்துவிட்டதாக காட்டப்பட்டதால் அந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரம் முடித்து வைக்கப்பட்டது.
நன்றாக போய்க் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாவாக நடித்து வந்த நடிகை ஷீலாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. நடிகை ஷீலா சினிமா நடிகர் விக்ராந்த்தின் தாயார் ஆவார். தற்போது விக்ராந்த் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். இவரை விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்ததாகவும் ஆனால், அவர் ஜீ தமிழ் சர்வைவரில் பங்கேற்றதாகவும் பேசப்பட்டது.
இதனால்தா, நடிகை ஷீலா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த லட்சுமி அம்மா கதாபாத்திரம் வேண்டும் என்றே முடித்து வைக்கப்பட்டதாக அப்போது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், நடிகை ஷீலாவின் கதாபாத்திரம் முடித்து வைக்கப்பட்டதால், இனிமேல், லட்சுமி அம்மா ஷீலாவை சீரியலில் பார்க்க முடியாத என்று ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான், விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா அறிமுகம் ஆகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நடிகை ஷீலா, ராதிகாவின் தாயாக இன்றைய எபிசோட் மூலம் அறிமுகமாகிறார். ஷீலா ராதிகாவின் தாயாக அறிமுகமாகும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸில் லட்சுமி அம்மா கேரக்டர் முடிக்கப்பட்டாலும் விஜய் டிவி அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் அம்மாவாக புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்திருக்கிறது. நடிகை ஷீலா மீண்டும் விஜய் டிவியில் நடிப்பதால், பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா ஷீலா மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.