/tamil-ie/media/media_files/uploads/2019/08/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-51.jpg)
Pandian Stores serial
Pandian Stores : விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தமிழ் சினிமா பார்த்து அலத்து போன கதை என்றாலும் மக்களுக்கு பிடித்திருக்கிறது. 3 மருமகள்கள் 4 அண்ணன் தம்பிகள் என கூட்டு குடும்பமாக வாழும் இந்த சீரியலின் கதை தினம் தினம் நல்ல ஒரு பொழுதுப்போக்கு ரகம் தான்.
இனி மீனா ராஜ்ஜியம் :
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் இளைய மருமகளான மீனா நாளுக்கு நாள் அனைவரிடமும் பாசமும் அன்பும் காட்டி வருகிறார். இவர் மீது குடும்பத்தினருக்கும் நல்ல அபிப்பிராயம் ஏற்பட தொடங்கி விட்டது. மீனாவுக்கும் எல்லார் மீது பாசமும் வந்து விட்டது. ஆரம்பத்தில் பணக்கார வீட்டில் இருந்து வந்ததால் மற்றவர்களுடன் சேர்ந்து பழகுவதில் பல பிரச்சனைகள் மீனாவுக்கு ஏற்பட்டு இருந்தது. அதிலும் குறிப்பாக மீனாவின் மாமியர் அவரை வெறுத்து ஒதுக்கினார்.
கலக்குறே #Meena ????????????????
பாண்டியன் ஸ்டோர்ஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. #PandianStores#VijayTelevisionpic.twitter.com/6FAPjBx1oC— Vijay Television (@vijaytelevision) August 29, 2019
ஆனால் இப்போது அவரிடமே நல்ல மருமகள், செல்ல மருமகள் என பெயர் வாங்கி விட்டார் மீனா. முல்லைக்கு அப்புறம் மீனாவுக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்க தொடங்கி விட்டது.
கதிர் அப்பா ஆயிட்டாரா?
செம்பருத்தி சீரியலில் திடீர் ட்விஸ்ட் என்பது போல் கதிருக்கு புதிய பிரச்சனை வெடித்துள்ளது. கதிர் ஒரு பெண்னுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்வதி மறைந்து நின்று கேட்கிறார். அதில் அந்த பெண் தன்னுடைய குழந்தைக்கு கதிர் தான் அப்பா என வாதிடுகிறார். ஆனால் கதிர் அதை ஏற்க மறுக்கிறார். பிரியாவுடன் திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கதிருக்கு புதிய பிரச்சனை வெடித்துள்ளது.
இதிலிருந்து கதிர் எப்படி வெளியே வர போகிறார் என்பது வரும் வாரங்களில் சீரியலின் ட்விஸ்ட் கதை. கண்டிப்பாக பார்வதி கதிருக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.