/tamil-ie/media/media_files/uploads/2021/08/pandian-stores-twist.jpg)
பெருவாரியான ரசிகர்களின் ஆதரவுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் பரபரப்பான ட்விஸ்ட் புரோமோ வெளியாகி வரைலாகி உள்ளது. அதில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 4 சகோதரர்களில் கடைசித் தம்பி கண்ணன், ஐஸ்வர்யாவை கோயிலில் திருமணம் செய்துகொள்கிறான் இதனால், குடும்பமே களேபரமாகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏராளமான ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றி நடைபோட்டு வருகிறது. ஓவ்வொரு எபிசோடு ஒரு விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் அடைந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்று மளிகை கடை நடத்தும் 4 சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறார்கள். இதில் பெரிய அண்ணன் சத்திய மூர்த்தி, அவருடைய மனைவி தனம். சத்திய மூர்த்திக்கு அடுத்து தம்பி ஜீவா, அவனுடைய மனைவி மீனா, 2வது தம்பி கதிர், அவனுடைய மனைவி முல்லை, கடைசி தம்பி கண்ணன். தனம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகளாக வந்து கொழுந்தன்களை வளர்த்து ஆளாக்குகிறார். அதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார்.
சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர் 3 பேரும் மளிகை கடையை பார்த்துக்கொள்கிறார்கள். கடைசி தம்பி கண்ணன் கல்லூரி படிக்கிறான். கண்ணன், அண்ணி தனத்தின் அண்ணன் மகள் ஐஸ்வர்யாவை காதலிக்கிறான். ஆனால், ஐஸ்வர்யா மல்லியின் மகன் பிரசாந்த்துக்கு நிச்சயம் செய்து திருமணம் நடக்க இருக்கிறது. இந்த பிரசாந்த் யார் என்றால், பல ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்த மல்லி கல்யாணத்துக்கு முன்பு வேறு ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறாள். அந்த மல்லி திருமணம் செய்துகொண்டவரின் மூத்த தாரத்து மகன்தான் பிரசாந்த்.
கண்ணன், ஐஸ்வர்யாவை காதலிப்பது தெரிந்து அவருடைய சித்தி கஸ்தூரி அத்தாச்சி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் கண்ணனை கண்டித்து வைக்கச் சொல்லி புகார் தெரிவிக்கிறார். கடைசித் தம்பியான கண்ணன் தனது காதல் விவகாரத்தை சொல்ல பயந்துகொண்டு இருக்கிறான்.
இப்படி ஒரு சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் தடைகளைத் தாண்டி தனது காதலி ஐஸ்வர்யாவை கரம்பிடிப்பானா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன், தனது அண்ணகளுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்வதாக புரோமோ வெளியாகி சீரியலின் கதையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விஜய் டிவி வெளியிட்டுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோவில், கஸ்தூரி அத்தாச்சி, கோபமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு வந்து எங்க போனான் அந்த கண்ணன் என்று கேட்கிறார். அதற்கு, தனம் இப்ப நீங்க எதுக்கு கண்ணனை தேடுறீங்க என்று கேட்கிறார். அதற்கு கஸ்தூரி, அந்த கண்ணன்தான் ஐஸ்வர்யாவை கூட்டிட்டு ஓடிப் போயிட்டானாம் என்று கோபமாக கூறுகிறார். இதைக்கேட்ட சத்திய மூர்த்தி, “உங்களுக்கு என்ன பைத்தியமா புடிச்சிபோச்சா” என்று கேட்கிறார். தனமும் கண்ணன் அப்படிபட்ட பையன் இல்லை என்று கூறுகிறார். சத்தியமூர்த்தி தனது தம்பிகள் ஜீவா மற்றும் கதிரிடம் போய் கண்ணனை கூட்டிட்டு வாடா என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் தம்பி கண்ணனை தேடி ஒரு கோயிலுக்கு போகிறார்கள். அங்கே கண்ணன், ஐஸ்வர்யா கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். அப்போது பிர்சாந்த்தும் வந்து நிற்கிறான்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீர்யலில் கடைசி தம்பி கண்ணன் அண்ணன்களுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்துகொள்வதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே களேபரமாகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ண்ன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொள்கிற மிகப்பெரிய ட்விஸ்ட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புரோமோ வீடியோ சமூக ஊடகங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.