pandianstores meena vijay tv serial : மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு சகோதரர்களைப் பற்றிய கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்
தனது 3 தம்பிகளையும், உடல்நிலை சரியில்லாத அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ள வேணாம் என திருமணமான ஆரம்பத்திலேயே தனத்திடம் சொல்லி விடுகிறார் மூர்த்தி. இதை தனமும் ஏற்றுக் கொள்கிறாள்.
மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது.
தற்போது ஜீவாவின் மனைவி மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்து அவர் வீட்டில் சில காலம் இருந்து, கடைசியில் தனம் உண்டான செய்தி கேட்டு மீண்டும் புகுந்த வீட்டிற்கே வந்து விட்டார். இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள்
இந்த ஒற்றுமையை பிரிக்க மீனாவின் அப்பா ஏற்பாடான சிங்கப்பூர் அத்தையின் சாயம் வெளுத்து போச்சி. அவரின் உண்மை குணம் மீனாவுக்கு தெரிய வர. உடனே, பேக் செய்கிறாள் மீனா. தனது அப்பாவை வரவைத்து அத்தையை அழைத்து போகும்படி சொல்கிறாள். அதுமட்டுமில்லை, புதுசா வாங்கிய வாஷிங் மிஷின், கேஸ் அடுப்பு எல்லாவற்றையும் எடுத்து போகும்ப்படி சொல்கிறாள். சபாஷ் மீனா. கலக்குறீங்க போங்க.