அவ்வப்போது மின்னல் போன்று வந்து 'யார்யா இந்த பொண்ணு; இவ்ளோ அழகா' என்று இளசுகளை கேட்க வைப்பவர் பாப்ரி கோஷ். சினிமா, சீரியல் என இரண்டு குதிரையிலும் ஒருசேர சவாரி செய்வதால் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.
மேற்கு வங்கத்தை சேர்ந்த பாப்ரி கோஷ் 2009ம் ஆண்டு முதன் முதலாக kaalbela எனும் வங்க மொழிப் படத்தில் நடித்தார்.
தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.
தொடர்ந்து விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களிலும் சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா படத்திலும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் பாப்ரி கோஷ் நடித்தார்.
ஆனால், எதுவும் பெரிய ரோலாகவோ, பேசும் படியான ரோலாகவோ அமையவில்லை என்ற வருத்தம் இவருக்கு நிறையவே உள்ளது.
அதேசமயம், சீரியல்களிலும் கவனம் செலுத்த தொடங்கினார். நாயகி தொடரில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
சினிமாவைத் தாண்டி சீரியல் மூலம் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறார்.
வாழ்த்துகள் பாப்ரி!!