Advertisment

எம்.ஜி.ஆர் டூயட்: எம்.எஸ்.வி நிராகரித்த பாடலை ஹிட் ஆக்கிய கே.வி மகாதேவன்!

எம்.ஜி.ஆர் படத்திற்கு டூயட் எழுதிய கவிஞர் வாலி; எம்.எஸ்.விஸ்வநாதன் நிராகரித்ததால், அதே பல்லவியை மற்றொரு எம்.ஜி.ஆர் படத்தில் மிகப்பெரிய ஹிட் ஆக்கினார் கே.வி.மகாதேவன்

author-image
WebDesk
New Update
தமிழ் விளையாட்டு 11 : வல்லினம் புல்லினம்

எம்.ஜி.ஆர் படத்திற்கு டூயட் எழுதிய கவிஞர் வாலி; எம்.எஸ்.விஸ்வநாதன் நிராகரித்ததால், அதே பல்லவியை மற்றொரு எம்.ஜி.ஆர் படத்தில் மிகப்பெரிய ஹிட் ஆக்கினார் கே.வி.மகாதேவன்

எம்.ஜி.ஆர் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் நிராகரித்த பல்லவியை, இன்னொரு எம்.ஜி.ஆர் படத்தில் கே.வி.மகாதேவன் மிகப்பெரிய ஹிட் ஆக்கினார் என்று கவிஞர் வாலி கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசிய கவிஞர் வாலி, ”பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்த படம் ஒன்று டூயட் பாடல் எழுதினேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். அதில் அந்த டூயட் பாடலுக்கு, ”புத்தம் புதிய புத்தகமே, உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான், பொதிகை வளர்த்த செந்தமிழே, உன்னை பாட்டில் வடிக்கும் புலவன் நான்,” என்ற வரிகளை எழுதிக் கொடுத்தேன். ஆனால் வரிகள் நீளமாக இருக்கு, சின்னதா எழுதிக் கொடுங்க என விஸ்வநாதன் கேட்டார். சரி என நான் கிளம்பிவிட்டேன்.

அன்றைக்கு மதியமே எனக்கு அரச கட்டளை படத்திற்கான கம்போசிங் இருந்தது. இந்தப் படத்திற்கு கே.வி மகாதேவன் இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி நடித்தனர். இந்தப் படத்திற்கு ஒரு டூயட் பாடல் தேவைப்பட்டது. அதற்கு புத்தம் புதிய புத்தகமே, உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான் என்ற அதே பல்லவியை கொடுத்து, டியூன் போடச் சொன்னேன். அவர் அபாரமாக ட்யூன் போட்டார். இந்தப் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.” என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

msv Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment