Ponmagal Vandhal Review Reactions: ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதனை அறிமுக இயக்குநர் ஜெ.ஜெ.ஃப்ரெட்ரிக் இயக்கியுள்ளார். இதில் பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு தற்போது பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஜோதிகா மற்றும் பார்த்திபன் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சைக்கோ கொலையாளியின் மரணத்தில் ஒளிந்திருக்கும் மர்மத்தைப் பற்றிய முடிச்சுகளை அவிழ்க்கும் சுவாரஸ்ய திரைக்கதை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி, துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால் ஜோதிகா மனதில் நிற்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.
இந்நிலையில் ஜோதிகாவின் நடிப்பைப் பாராட்டி, பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்தவரும், இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
”நீர்… பாத்திரத்துடன் ஒன்றி அப்பாத்திரத்தின் வடிவத்தை அடைவதைப் போல்…
நீர் இப்படத்தில் பாத்திரமாகவே அதுவும் பத்திரமாகவே (கொஞ்சம் நழுவினாலும் உடையக்கூடிய கண்ணாடிப் பாத்திரம்). Reality show-வில் பாதிக்கப்பட்ட பெண்ணையே அழைத்து வந்து அவர் வலியிலிருந்து வலிமைக்குள் நுழைந்த பகீரத தருணங்களை விளக்கும் போது, இனம் புரியாத விசும்பல் நமக்குள் வெடிக்கும். அப்படி படம் நெடுக! தன் அகன்ற விழிகளால் ஆடியன்ஸை ஆக்கிரமிக்கும் அக்கிரமம். அதுவும் Maximum சின்ன முள், பெரிய முள் மற்றும் நடு முள் இத்தனை முட்களுக்கு நடுவே தான் நேரம் பூப் பூவாய் வாசம் வீசுவதை போல… மிக சாதூர்யமாக, சாத்வீகமாக, சவாலான ஒரு கேஸை Lawவகமாகக் கையாண்டு… கண்ணீர் ஆறுகளுக்கு நடுவே பன்னீர் புஷ்பம் பூப்பதைப் போல உங்கள் கன்னக்குழியினில் ஒரு மெளனப் புன்னகை.
அசோக PILLAR மீது 4,5 சிங்கங்கள் போல படத்தில் சிலர் நடித்-இருந்தாலும் நீங்கள் மட்டுமே அந்த PILLAR.. தில்’லர்!’
அந்த சட்டப் புத்தகத்தில் 1000 பக்கங்கள் இருந்தாலும்,
அந்த சட்டமாகவே நீங்கள்தான் இருக்கிறீர்கள்.
அந்த சுத்தியல் கூட, உங்கள் உணர்ச்சிக்கு முன்னால் யார் நடித்தாலும் ‘SILENCE’
என அதட்டுகிறது.
நீதி தேவதைக் கூட ஓரக்கண்ணால் உங்கள் நடிப்பை மட்டுமே ரசிக்கிறாள். அவளைப் போலவே
நானும் உங்களின் துல்லியமான உணர்ச்சி வெளியீட்டை உணர்ச்சிவசப்பட்டே பார்த்துக் கொண்டடிருந்ததில் நானே என் வசப்படாமல் போனேன்-போலானேன். ஏன்?
நடிகர் திலகம், நடிகையர் திலகம், நடிப்பின் இலக்கணம் இப்படி இன்னும் சில பல இருப்பினும். அவை அனைத்தையும் உருக்கி ஒரு பொன் கேடயமாக்கி ..கதா பாத்திரமாகவே சதா க்ஷனமும் வாழ்ந்திருக்கும் எங்கள் ஜோ.வுக்கு ‘ஜே ஜே’ சொல்லி வழங்கலாம்.வாழ்த்தலாம் । படத்தை வெளியிட்ட OTT – Amazon ஆக இருக்கலாம்,
நடிப்பை வெளியிட்ட Jyotika – Amazing in
Oppatra (ஒப்பற்ற)
Thaniththuvamaana (தனித்துவமான)
Thiramai (திறமை)” என்றுக் குறிப்பிட்டிருக்கிறார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Jyothika’s Ponmagal Vandhal Review Rating reactions
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஆன்லைனில் வெளியாகியிருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் குறித்த ட்விட்டர் ரியாக்ஷன்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
துணை நடிகர்கள் தங்களின் வேலையை சரியாக செய்திருக்கிறார்கல். ஆனால் குழப்பமான எழுத்து, தட்டையான அம்சம் மற்றும் எல்லாவற்றையும் உரத்த உணர்ச்சியில் பேசுவதால் படம் பெரிதாக ஈர்க்கவில்லை
பாதிக்கப்பட்டவர்களின் குரலாக வெண்பா ஒலிக்கிறார். அதுதான் பொன்மகள் வந்தாள் படத்தின் பெரிய பலம். ஜோதிகா தனது நடிப்பால் படத்தை சிறப்பாக எடுத்துச் செல்கிறார்.
படம் மிகவும் தேவையான செய்தியை தெரிவிக்கிறது. அனைவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
யூகிக்கக் கூடிய திரைக்கதை தான் படத்திற்கு மைனஸ் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.
படத்தை சாம்பியன் போல ஜோதிகா கையாண்டிருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
எது சரி, எது தவறு என்பதை பெற்றோர்கள் ஆண் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்
சமூகத்துக்கு தேவையான கருத்துக்களுடன், அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என இந்த பயனர் தெரிவித்துள்ளார்.