மணி சாரின் மாஸ்டர் பீஸ் “ பொன்னியின் செல்வம்” முதல் பாகம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் சினிமா வரலாற்றில் இதுவரை நடைபெறாத வசூலை குவிக்க போகிறது பொசெ-1 .
மணி ரத்தினத்தின் முந்தைய படங்களான ஓகே கண்மனி, பாம்பே, செக்கச் சிவந்த வானம் இப்படி எந்த படமும் நிகழ்த்தாத சாதனையை பொன்னியின் செல்வம் செய்யவுள்ளது. பல நடத்திரங்கள் நடத்திருப்பது மட்டுமல்லாமல், கதை, வடிவமைப்பு என்று ஒட்டுமொத்த படைப்புமே பல்வேறு பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
பாகுபலி 2 வை விட இதன் எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதிலும் கிட்டதட்ட 15 நாட்களுக்கு எல்லா திரையரங்குகளும் முழுவது முன்பாகவே பதிவு செய்யப்பட்டுவிட்டது. ‘ டிக்கெட் கிடைக்கலையே” என்று சமூகவலதளங்களில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவிற்கு பிறகு விக்ரம் திரைப்படம்தாம் அதிக லாபத்தை கொடுத்திருக்கிறது .ஆனால் அதை விட பல மடங்கு லாபத்தை வெளியாவதற்கு முன்பாகவே பொ.செ செய்துவிட்டது. சமீபத்தில் மூத்த குடிமக்கள் படம் காண வருவார்கள் தியேட்டர் உரிமையாளர்கள் நன்றாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஒருவர் பதிவு செய்ய, அந்த ட்வீடுக்கு நடிகர் விக்ரம் அன்பாக பதில் தெரிவித்தார்.
பல வருடங்கள் வீட்டிலேயே முடங்கி இருந்த பெரியவர்கள், இதை பார்த்தே ஆக வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை இந்த படத்திற்கு மாஸ் பார்வையாளர்கள் வெயிட்டிங். விக்ரம் செய்த ரூ.120 கோடி சாதனையை சாதரணமாகவே பொ.செ கடந்துவிடும்.