அவரைவிட திறமையாளர்கள் பலர் உள்ளனர் : வைரமுத்து குறித்து இயக்குனர் மணிரத்னம் பதில்

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
அவரைவிட திறமையாளர்கள் பலர் உள்ளனர் : வைரமுத்து குறித்து இயக்குனர் மணிரத்னம் பதில்

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இருந்து தொடர்ந்து ரஹ்மான் மணிரத்னம் வைரமுத்து கூட்டணி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிரிந்துள்ள நிலையில், இது தொடர்பான கேள்விக்கு தற்போது இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். வரலாற்று பதிவுகளை பற்றி பேசும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்தீபன், விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் டிரெய்லவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே பொன்னியின் செல்வன் படம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே 90-களின் தொடக்கத்தில் வெளியான ரோஜா படத்தில் இருந்து இணைந்து பணியாற்றிய மணிரத்னம் ஏ.ஆர்,ரஹ்மான் வைரமுத்து காம்போ இந்த படத்தில் பிரிந்துள்ளது. பாடகி சின்மயின் மீடு விவகாரத்தில் சிக்கியதால் பட ரிலீஸ் சமயத்தில் ஏதேனும் பிரச்சினை வரும் என்று யோசித்தால் இந்த படத்தில் வைரமுத்துவுக்கு இயக்குனர் மணிரத்னம் பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தகவல் வெளியானது.

Advertisment
Advertisements
publive-image

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், இயக்குனர் மணிரத்னம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவரிடம் இந்த படத்தில் வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த இயக்குனர் மணிரத்னம், ரோஜா படத்தில் இருந்து அவர் எங்களுடன் பயணித்துக்கொண்டிருந்தார். எங்களின் கூட்டணியில் பெரிய ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் தமிழில் வைரமுத்துவைபோல் பல கவிஞர்கள் உள்ளனர். அவரை விட திறமையாளர்களும் உள்ளனர். புதிய கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்என்பதால் இந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: