இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவி நடித்து வரும் கேரக்டரின் பெயர் அருள்மொழி வர்மனா அல்லது அருண்மொழி வர்மனா என்பது குறித்து படக்குழு தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மணிரத்னம் தற்போது பெரிய பொருட்செலவில் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில். இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி வெளியாக உள்ளது.
விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பார்த்தீபன், நாசர், சரத்குமார், த்ரிஷா ஐஸ்வர்யா ராய் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள கேரக்டரின் பெயர் அருள்மொழி வர்மனா அல்லது அருண்மொழி வர்மனா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது .
தற்போது இதற்கு பதில் அளிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் படக்குழு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அருண்மொழி வர்மன் ராஜ ராஜ சோழன் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் அருண்மொழி வர்மன் பெயர் விளக்கத்தையும், அவர் எப்படி ராஜ ராஜ சோழன் ஆனார் என்பது குறித்தும் வரலாற்று ஆசிரியர்கள் உள்ளிட்ட சிலர் விளக்கும் காட்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதற்கு முன்பு சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம் என்ற தலைப்பில் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியிருந்தது குறிப்பிடத்க்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil