பொன்னியின் செல்வம் திரைப்படம் வெளியாகி ரூ. 250 கோடி வசூலை ஈடியுள்ளது. இந்நிலையில் மேலும் வசூல் வேட்டை தொடர்கிறது.
இந்நிலையில் படத்திற்கான புரோமோஷன்களில் நடிகர் விக்ரம் பேசியபோது, சோழர்களின் வரலாற்றை போற்றும் வகையில் பேசியுள்ளார். அவர்கள் கட்டிய கோவில், சமூக அமைப்பு இப்படியாக பலவற்றை அவர் குறிப்பிட்டு பேசினார். இந்நிலையில் இத்திரைப்படம் சோழர்கள் வரலாற்றை மீண்டும் நமது கண்முன் கொண்டுவந்துள்ளது.
அவர்களது ஆட்சியை பற்றி பலரும் சமூகவலைதளங்களில் எழுதி வருகின்றனர். பொன்னியின் செல்வம் ஒரு கற்பனை கதை மட்டுமே எனதுதான் உண்மை. இது கல்கியின் கற்பனையில் தோன்றிய கதை. ஆனால் இக்கதை சோழர்கள் குறித்தான ஆர்வத்தை தூண்டி உள்ளது.
சோழர்கள் காலம்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசத்தின் சில பகுதிகள், கர்நாடகா ஆகிய இடங்களை உள்ளட்டகியதாக இருந்தது சோழர்கள் ஆட்சி. 9வது நூற்றாண்டு முதல் 12 நூற்றாண்டு வரை அவர்களது காலமாக இருந்தது. இந்நிலையில் இடையில் இராஷ்டிரகூடர் ஆட்சி, சாளுக்கியர் ஆட்சிகள் வந்து சென்றன.
பல ஆட்சியாளர்கள் ஆண்டபோதும், சோழர்கள் ஏன் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் கடல் வழியாக போர் செய்வதில் வலிமை வாய்ந்தவர்கள். எழுத்தாளர் சந்திரா விவரிக்கையில், வங்காள விரிகுடாவை சோழா ஏறி என்று கூறும் அளவிற்கு இருந்தது.
இந்நிலையில் அவர்களது காலத்தில் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் பல பாலங்கள் இப்படி அவர்களது கட்டட கலை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் அவர்களது ஆட்சி காலத்தைப் பற்றி பல விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையிலும், அவர்களது ஆட்சி காலத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம். குறிப்பாக அரசியல் முடிவுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எல்லா பெண்களும் ஆண்களும் சமமாக நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.