திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 95வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.
Advertisment
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி, ஜூன் 3ம் தேதி 1924ம் ஆண்டு பிறந்தார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவாக்கலை கிராமத்தில் முத்துவேலு மற்றும் அஞ்சு தம்பதிக்கு பிறந்த இவரின் இயர்ப் பெயர் தக்ஷிணாமூர்த்தி. வருடங்களுக்குப் பின்னர் கருணாநிதி என்ற பெயரை கொண்டு இவர் அழைக்கப்பட்டார்.
“தூக்கு மேடை” நாடக தயாரிப்பின்போது, நடிகர் எம்.ஆர். ராதா கருணாநிதிக்கு கலைஞர் என்று பெயர் சூட்டினார். அன்று முதல் இன்று வரை எல்லோராலும் கலைஞர் என்று பெருமையாய் அழைக்கப்படுகிறார்.
கருணாநிதி தனது 20 வயதில், திரைத்துறைக்குள் காலடி பதித்தார். இவர் திரை வசனம் எழுதிய முதல் படம் “ராஜ குமாரி”. 1947ம் ஆண்டு திரைப்படங்களுக்கு வசனம் எழுதத் தொடங்கிய இவர், இறுதியாக 2011ம் ஆண்டு வெளியான “பொன்னர் சங்கர்” படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் நடித்த ‘பராசக்தி’ படத்தில் இவர் எழுதிய வசனங்கள் தமிழகம் முழுவதும் ஒளிக்கத் தொடங்கியது. இவ்வாறு மனோகரா, மனி மகுடம், புதுமை பித்தன், பூம்புகார் ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது.
கலைஞர் என்னும் படைப்பாளியின் படைப்புகளில் ஒரு சிலவற்றை காணலாம்:
பராசக்தி:
மனோகரா :
பூம்புகார் :
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news