அஜித் போய்ட்டாரு, எனக்கு ஹீரோ கிடைக்கல; அப்புறம் தான் சூர்யா நடிக்க வந்தார்; பிரபல இயக்குனர் சொல்வது எந்த படம் தெரியுமா?

ஏ.ஆர்.முருகதாஸ் தனது கரியரில் ஒரு படத்தில் நடிகர் மாற்றப்பட்டதற்கு காரணம் மற்றும் அந்த படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பற்றி கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தனது கரியரில் ஒரு படத்தில் நடிகர் மாற்றப்பட்டதற்கு காரணம் மற்றும் அந்த படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பற்றி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ajith surya

முருகதாஸ் மற்றும் சூர்யாவின் கூட்டணியில் உருவான இந்தப் படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இன்றும் ரசிகர்களின் மனதில் நிற்கும் ஒரு சிறந்த த்ரில்லர் படமாக நிலைத்து நிற்கிறது. இந்நேரத்தில் ரசிகர்கள் இது என்ன படம் என்று யூகித்து இருப்பீர்கள் அது கஜினி படம்தான். கஜினி படம் என்றாலே ரசிகர்கள் பலருக்கும் மிகவும் பிடித்த படமாகும். இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஒரு சுவாரசியமான தகவல்களை நேர்க்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

Advertisment

கஜினி (2005) திரைப்படம், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஒரு தமிழ்த் த்ரில்லர் திரைப்படமாகும். இது, ஒரு குறுகியகால நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்ட 'சஞ்சய் ராமசாமி' என்ற கதாபாத்திரத்தைச் சுற்றி அமைந்த கதை. இப்படம் வெளியானபோது, மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. பின்னர், இது இந்தியில் அமீர்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் பெரிய வெற்றி பெற்றது.

ghajini

பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தனது சூப்பர் ஹிட் படமான 'கஜினி' உருவான விதம் குறித்துப் பகிர்ந்துள்ளார். முதலில் இந்தப் படத்தின் கதையுடன் அவர் நடிகர் அஜித்குமாரை அணுகியுள்ளார். அஜித் கதையைக் கேட்டு நடிக்கவும் சம்மதித்துள்ளார். படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடந்த நிலையில், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது.

இதனால் ஏமாற்றமடைந்த முருகதாஸ், அடுத்த ஹீரோ யார் என்ற குழப்பத்தில் இருந்தபோது, ஒரு வருடத்திற்கும் மேலாக 'கஜினி' ஸ்கிரிப்ட்டை மெருகேற்றும் பணியில் ஈடுபட்டார். அந்த சமயத்தில், பல நடிகர்கள் கதையின் மீதான சந்தேகங்களால் நடிக்கத் தயங்கியுள்ளனர். அப்போது, நடிகர் சூர்யா அந்த ஸ்கிரிப்டைக் கேட்க, அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. படத்தின் மீதும் முருகதாஸ் மீதும் கொண்ட நம்பிக்கையால் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார்.

Advertisment
Advertisements

'சந்திரமுகி' மற்றும் 'அந்நியன்' போன்ற பெரிய படங்கள் அதே ஆண்டில் வெளியாகும் நிலையில், "கஜினி" நம்பர் 1 படமாக இருக்கும் என்று சூர்யாவிடம் முருகதாஸ் கூறியதாகத் தெரிவித்துள்ளார். அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை. இவ்வாறு, அஜித்துடன் தொடங்க வேண்டிய ஒரு படம், பல சவால்களைக் கடந்து சூர்யாவுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.  

Ar Murugadoss Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: