அப்பா நகைகளை வித்து பசங்களுக்கு பார்ட்டி வச்சேன், அப்போ அவர் சொன்னது ஒரே வார்த்தை தான்; பிரபல சீரியல் நடிகர் உருக்கம்!

தனக்கு பொருப்பு இல்லாமல் இருந்ததும் வீட்டில் இருந்த நகைகளை விற்று பார்ட்டி வைத்தது என தனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பிரபல சீரியல் நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

தனக்கு பொருப்பு இல்லாமல் இருந்ததும் வீட்டில் இருந்த நகைகளை விற்று பார்ட்டி வைத்தது என தனது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை பிரபல சீரியல் நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
sree

சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஸ்ரீ குமார், தனது இயல்பான நடிப்பால் பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஆனந்தம், அகல்யா, பந்தம், உறவுகள் போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், சமீபத்தில் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான மற்றும் உருக்கமான அனுபவத்தைப் பற்றி தனது யூடியூப் பக்கத்திலேயே மனம் திறந்து பேசியுள்ளார். இந்த நிகழ்வுதான் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று குறிப்பிடுகிறார். ஸ்ரீ சீரியல்கள் மட்டுமில்லாமல் சில படங்களில் குறிப்பிட்ட கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது கனக்வித் ஸ்ரீ என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருகிறார். 

Advertisment

ஸ்ரீ தனது பள்ளிப் பருவத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும், பத்தாம் வகுப்பில் 10 பாடங்களில் தோல்வியடைந்ததாகவும் கூறுகிறார். அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான சங்கர் கணேஷ், மகனின் திறமையை வளர்க்கும் நோக்கில் அவருக்கு கீபோர்டு மற்றும் கிட்டார் கற்றுக்கொடுத்தார். ஆனால், ஸ்ரீ தனது கெட்ட நண்பர்களின் பேச்சைக் கேட்டு, வீட்டில் இருந்த நகைகளைத் திருடி விற்றிருக்கிறார். அந்தப் பணத்தில் தனது நண்பர்களுக்குப் பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளார்.

இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பாவுக்குத் தெரிந்ததும், அவர் கோபப்படாமல், "கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய இந்த நகைகளின் மதிப்பு உனக்குத் தெரியவில்லை" என்று வருத்தத்துடன் ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லியிருக்கிறார். மேலும் இருக்கும் அனைத்து நகைகளையும் எடுத்து ஸ்ரீ முன்பு வைத்து இதெல்லாம் உனக்குத்தான் ஆனால் சொல்லிவிட்டு எடுத்துச்சென்று செலவு செய், ஆனால் தெரியாமல் எடுக்காதே என்று கூறியுள்ளார். அப்போதுதான் முதல்முறையாக தனது அப்பாவின் கண்களில் கண்ணீரைக் கண்டதாகவும், அதுவே தன்னை ஆழமாகப் பாதித்ததாகவும் ஸ்ரீ உருக்கமாக கூறினார்.

அந்தச் சம்பவம் ஸ்ரீயின் மனதை மாற்றியது. தனது தவறை உணர்ந்து, அப்பாவின் தியாகத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் கடினமாக உழைக்க முடிவு செய்தார். அதன் விளைவாக, அவர் சீரியல் துறையில் நுழைந்து, தனது தனிப்பட்ட முயற்சியால் "யாரடி நீ மோகினி" போன்ற தொடர்களில் நாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். மேலும் எங்கும் தனது தந்தையின் பெயரை பயன்படுத்தாமல் சுயமாகத்தான் முன்னேறுவார் என்றும் அவரது தந்தை குறிப்பிட்டார். 

Advertisment
Advertisements
Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: