தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை என்று அவரது மனைவி அளித்த புகாரையடுத்து போலீசார் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளனர்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் 3 கதாநாயகனாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் தனது நகைச்சுவை தன்மையால் அனைவரையும் சிரிக்க வைத்தவர். நகைச்சுவை மட்டுமே கொண்டிருப்பார் என்று பலரும் நினைத்திருந்த நேரத்தில் கவன் படத்தில் எல்லோருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும் அதனை மதிக்க வேண்டும் என்று செம்ம கருத்து சொன்னார்.
பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை
அப்படிப்பட்ட நபருக்கு தற்போது ஒரு சிக்கலான சூழல் ஏற்பட்டுள்ளது. பவர் ஸ்டாரின் மனைவி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரை பலரும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் பவர்ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டனர். அப்போது சொத்து விவகாரம் காரணமாக ஊட்டி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.