/indian-express-tamil/media/media_files/2025/04/29/Royc8Dalja8m6QJVcw39.jpg)
பிரபல பாலிவுட் நடிகை நடிகை ப்ரீத்தி ஜிந்தா, திருமணத்திற்குப் பிறகு தனது கணவர் ஜீன் குட்எனஃப் உடன் அமெரிக்காவில் குடியேறினாலும், வேலைக்காகவும் குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அவரது அணியான பஞ்சாப் கிங்ஸ் விளையாடும்போதும் அடிக்கடி இந்தியாவிற்கு வந்து செல்கிறார். சமீபத்தில், அவர் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Preity Zinta says she’s raising her kids as Hindus, shuts down speculation about joining BJP: ‘My identity doesn’t equate with me joining politics’
அப்போது ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த அவர், தனது குழந்தைகளை இந்துக்களாக வளர்த்து வருவதாகவும், தனது கணவர் மதநம்பிக்கை இல்லாதவராக இருப்பது இதற்கு உதவுவதாகவும் தெரிவித்தார். இது குறித்து ப்ரீத்தி தனது ட்வீட்டில், "நான் ஒரு தாயான பிறகு, வெளிநாட்டில் வசிப்பதால் என் குழந்தைகள் தாங்கள் பாதி இந்தியர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது என்று விரும்புகிறேன். என் கணவர் மதநம்பிக்கை இல்லாதவர் என்பதால், நாங்கள் எங்கள் குழந்தைகளை இந்துக்களாக வளர்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது குழந்தைகளுக்கு இந்தியப் பண்பாடுகளையும், அவர்களின் வேர்களையும் கற்றுக்கொடுப்பதில் தான் பெருமிதம் கொள்வதாக தெரிவித்த ப்ரீத்தி ஜிந்தா, தனது நம்பிக்கையை எல்லோருக்கும் விளக்க வேண்டியிருப்பதில் தனக்கு வருத்தம் இருப்பதாகவும் கூறியுள்ளார். எனது இந்த எளிய சந்தோஷம் கூட தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது என்பது "வருத்தமாக இருக்கிறது. எனது குழந்தைகளை இந்துக்களாக வளர்க்கும் எனது விருப்பம் எப்போதும் அரசியல் நோக்கத்துடன் பார்க்கப்படுகிறது.
நான் யார் என்பதற்காகவும், என் குழந்தைகளுக்கு அவர்களின் வேர்கள் மற்றும் மதத்தைப் பற்றி கற்றுக்கொடுப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது" என்று அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். சமீபத்தில் ப்ரீத்தி ஜிந்தா கோவில்களுக்குச் சென்றதையும், கும்பமேளாவில் கலந்து கொண்டதையும் பார்த்த ஒரு ரசிகர், அவர் பாஜகவில் இணையப் போகிறாரா என்று கேள்வி எழுப்பினார்.
I’m sorry if I sounded abrupt ! I have PTSD from this question. Appreciate your clarification 🙏After becoming a mom & living in a foreign country I wanna make sure my kids don’t forgot they are half Indian. Since my husband is agnostic we are bringing up our kids as Hindus.… https://t.co/ce0pHFKj8H
— Preity G Zinta (@realpreityzinta) April 28, 2025
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாகவே ப்ரீத்தி தனது கருத்தைப் பதிவு செய்தார். அந்த ரசிகருக்கு பதிலளித்த அவர், "சமூக வலைத்தளத்தில் உள்ளவர்களின் பிரச்சனை இதுதான். சமீப காலமாக எல்லோரும் மிகவும் விமர்சன மனப்பான்மையுடன் இருக்கிறார்கள். நான் முன்பே சொன்னது போல், கோவிலுக்குச் செல்வதும், மகா கும்பமேளாவுக்குச் செல்வதும், நான் யார் என்பதிலும் எனது அடையாளத்திலும் பெருமிதம் கொள்வதும் நான் அரசியலில் சேருவதற்கோ அல்லது பாஜகவில் சேருவதற்கோ இல்லை" என்று திட்டவட்டமாக பதிலளித்தார்.
வெளிநாட்டில் வசிப்பது தனது நாட்டின் மதிப்பை மேலும் உணர வைத்திருப்பதாகவும் ஒப்புக்கொண்ட ப்ரீத்தி,"இந்தியாவிற்கு வெளியே வாழ்வது எனது தாய்நாட்டின் உண்மையான மதிப்பை உணர வைத்துள்ளது. மற்றவர்களைப் போலவே நானும் இந்தியாவையும், இந்தியாவிற்குரிய அனைத்தையும் இப்போது அதிகமாக மதிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
That’s the problem with people on social media, everybody has become so judgemental off late. As I said earlier, going to a temple / Maha Kumbh and being proud of who I am & my identity does not equate with me joining politics or for that reason BJP. Living outside India has made… https://t.co/34PBYMSC9F
— Preity G Zinta (@realpreityzinta) April 28, 2025
1998 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'தில் சே' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக ப்ரீத்தி ஜிந்தா, 'கோயி மில் கயா', 'கல் ஹோ நா ஹோ', 'லக்ஷ்யா', 'வீர் சாரா' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து 2000 களின் முற்பகுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார். 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த நீர்மின் சக்தி நிறுவனத்தின் நிதிப்பிரிவின் மூத்த துணைத் தலைவரான ஜீன் குட்எனஃபை திருமணம் செய்துகொண்ட பிறகு அவர் திரைப்படத்துறையிலிருந்து விலகினார். 2021 ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் ஜெய் என்ற மகனையும், ஜியா என்ற மகளையும் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.