/indian-express-tamil/media/media_files/s4VitziIDJhD0bu2v7y0.jpg)
பிரியங்கா தேஷ்பாண்டே
கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் அழங்கிய கோல்டன் ஸ்டார்ஸ் விருது வழங்கும் விழாவில், விருது பெற்ற வி.ஜே. பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு அவருடைய அப்பா விருது வழங்குவதைப் போன்ற போட்டோ பரிசளிக்கப்பட்டதைப் பார்த்து எமோஷனலாகப் பேசினார்.
கலாட்டா தமிழ் யூடியூப் சேனல் கோல்டன் ஸ்டார்ஸ் 2024 விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், திரையுலகைச் சேர்ந்த விஜய் சேதுபதி, யோகி பாபு, இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விருது வழங்கும் விழாவில், விஜய் டிவி-யின் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பண்டேவுக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது பிரியங்கா தேஷ்பாண்டே மிகவும் மகிழ்ச்சியாகப் பேசினார். பிரியங்கா மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
விருது பெற்ற பிரியங்கா தேஷ்பாண்டே, ரசிகர்களின் இந்த அன்புக்கும் பாராட்டுதல்களுக்கு வரவேற்புக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கெல்லாம் தான் தகுதியானவளா என்று தெரியாது என்றாலும், ரசிகர்களின் இந்த அன்புடன் அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்துகொண்டிருப்பேன் என்று கூறினார். மேலும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அர்ச்சனா மற்றும் குரேஷி, இந்த விருது வாங்கும்போது, யாரையாவது பார்த்து திமிராக ஜெயிச்சுட்ட மாறா என்று சொல்ல வேண்டும் என்று சொன்னால் யாருக்கு சொல்வீர்கள்? என்று கேட்டனர். அதற்கு, பிரியங்கா, ஆமாம், சொல்லலாம், ஆனால், பேரு எல்லாம் சொல்லமாட்டேன், ஆனால், நான் இதை திமிர்ல சொல்லவில்லை. ஜெயிச்சுட்ட மாறா என்று சொல்லலாம். என்னை ஏமாற்றாதது என்னுடைய வேலை மட்டும்தான். அதை ஒழுங்கா செய்வேன். அந்த வேலை முழுசா தெரியுமா என்று கேட்டால் தெரியாது. ஆனால், என்னால் முடிந்தவரை செய்வேன் என்று கூறினா.
இதையடுத்து, பிரியங்கா தேஷ்பாண்டேவின் தம்பி மற்றும் மகள் வீடியோ-வில் பேசினார்கள். அப்போது, கடந்த 2-3 வருடங்களாக தனது தம்பி மகள் சியா தான் தனது உல என்று பிரியங்கா கூறினார்.
இதையடுத்து, பிரியங்காவுக்கு அவருடைய தந்தை பிரியாங்காவுக்கு விருது வழங்குவதுபோல, சித்தரிக்கப்பட்ட ஃபிரேம் செய்த போட்டோவை பரிசளித்தார்கள். அந்த புகைப்படத்தைப் பார்த்து மிகவும் எமோஷனல் ஆன பிரியங்கா கண்கலங்கினார். தனது அப்பா இப்போது இருந்தால் எனது வேலையைப் பார்த்து என்ன சொல்லியிருப்பார், அவருக்கு புடிச்சிருக்குமா, நல்லா பண்றனு சொல்லியிருப்பாரா இல்லை, என்ன இப்படி பண்றனு சொல்லி திட்டியிருப்பாரா என்று தெரியவில்லை. இப்போது எல்லாம், நான் ரொம்ப எமோஷனல் கிவிடுகிறேன். அதிகமா சந்தோஷப்பட்டாலும் கண்ல தண்ணி வருது, அழுதாலும் அதிகமா தண்ணி வருது, என்னோட அப்பா கூட இருந்தால் எப்படி இருக்கும் என்று எனக்காக யோசிக்கும் உங்களுக்கு நன்றி என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.