Priyanka Nalkari Tamil News: சன் டிவியில் ஒளிபரப்பாகி முன்னணி சீரியல்களுள் ‘ரோஜா’ சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் ஹீரோயினாக நடிகை “பிரியங்கா நல்காரி” நடித்து வருகிறார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த பிரியங்கா முதன் முதலில் ‘அந்தாரி பந்துவையா’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து நா சாமி ரங்கா, ஹைப்பர் ,நேனே ராஜு நேனே மந்திரி போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு சீரியல்களிலும் தோன்றிய அவர் ‘மேகமாலா’ மற்றும் ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய 2 சீரியல்களில் நடித்துள்ளார். பிறகு தமிழில் ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் ஹன்சிகாவின் தோழியாக நடித்தார். அதன் பின்னர், காஞ்சனா 3 படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது, ரோஜா சீரியல் மூலம் பட்டிதொட்டியெல்லாம் அறிமுகமாகியுள்ள பிரியங்கா தமிழில் டாப் சீரியல் ஹீரோயினாக இருக்கிறார். மேலும், ரோஜா சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்டாவில் மட்டும் இவருக்கு ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பிரியங்கா இன்ஸ்டாகிராமில் தனது பாய் பிரெண்டை அறிமுகம் செய்வது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதில், “Meet my meet my boyfriend ” என்று குறிப்பிட்டும் இருந்தார். மேலும், அந்த பதிவில் பிரியங்கா தொப்பி போட்ட ஒருவரை கட்டிபிடித்துக் கொண்டிருக்கிறார்.
இதைப்பார்த்து ஷாக் ஆனா அவரது ரசிகர்கள், பிரியங்கா உண்மையில் தனது பாய் பிரெண்டுடன் கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தைத்தான் பதிவிட்டுள்ளார் நினைத்தனர். ஆனால் அவர்களுக்கு சிறிது நேரம் கழித்து தான் உண்மையை தெரியவந்தது. அந்த பதிவில் பிரியங்காவை கட்டிப்பிடித்து கொண்டிருந்தது ஆண் அல்ல. ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்கும் விஜே அக்ஷயா தான் அது. இதனால் அப்செட் ஆனா ரசிகர்கள் பிரியங்கா இப்படி ஏமாற்றிவிட்டாரே என்று அந்த பதிவின் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“