/indian-express-tamil/media/media_files/2025/01/31/xQ41sjZvcgubJePY7UMw.jpg)
அல்லு அரவிந்த் - சூர்யா
தெலுங்கில் தயாராகியுள்ள நாக சைதன்யாவின் தண்டல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் விரையில் நேரடி தமிழ் படத்தை தயாரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பாளராக இருந்து வரும் அல்லு அரவிந்த், கீதா ஆர்ட்ஸ் என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறார். ஆனாலும் அவர் இதுவரை, நேரடி தமிழ் படங்கள் எதுவும் தாயரிக்கவில்லை. ரஜினிகாந்தின் மாப்பிள்ளை (1989), விஜயின் நினைத்தேன் வந்தாய் (1998), ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் டார்லிங் (2015) போன்ற படங்களை தயாரித்திருந்தாலும், இது ரீமேக் படங்கள்.
ஒரு தமிழ் நட்சத்திரத்தை வைத்து எழுதி தயாரிக்கப்பட்ட அசல் தமிழ் படத்தை அல்லு அரவிந்த் இன்னும் தயாரிக்கவில்லை. சுவாரஸ்யமாக, தனது தயாரிப்பில் அடுத்து வர உள்ள 'தண்டேல்' படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அத்தகைய திட்டம் நடக்கக்கூடும் என்று அரவிந்த் தெரிவித்தார். தமிழில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அவரது நேரடி படம், மற்றும் அவர் எந்த நடிகருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறார் என்பது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அல்லு அரவிந்த், “எனக்கு சூர்யாவுடன் நீண்ட காலமாக நல்ல நட்பு இருக்கிறது.. நிச்சயமாக அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். உண்மையில், இது ஆரம்ப நாட்கள்தான், ஆனால் சந்து (மொண்டேட்டி) இந்த திட்டம் குறித்து சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருப்பினும், இது இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. விஷயங்கள் எப்படி மாறும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.
சுவாரஸ்யமாக, தண்டேல் இயக்குனர் சந்து மொண்டேட்டி, நேர்காணல் ஒன்றில் பேசும்போது, அல்லு அரவிந்த் தனது திறமைகளில் நம்பிக்கை வைத்து, சூர்யா அல்லது ராம் சரண் போன்றவர்களுக்காக ரூ. 300 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரிக்கச் சொன்னதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டம் சூர்யாவின் திரைப்படத் தொகுப்பில் இணையும் என்று ஊகிக்கப்படும் நீண்ட படங்களின் வரிசையில் இணைகிறது. கார்த்திக் சுப்பராஜின் ரெட்ரோவின் வெளியீட்டிற்காக நடிகர் சூர்யா காத்திருக்கும் அதே வேளையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் ஆகிய படங்களும் அவரிடம் உள்ளன. மற்ற ஊகத் திட்டங்களில் பாசில் ஜோசப் மற்றும் வெங்கி அட்லூரி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
சுகுமார் இயக்கத்தில், '100% லவ்' படத்திற்குப் பிறகு அல்லு அரவிந்த், நாக சைதன்யாவுடன் இணையும் முதல் படமான 'தண்டேல்' பிப்ரவரி 7 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பிரேமம் மற்றும் சவ்யசாச்சி படங்களுக்குப் பிறகு சைதன்யா மற்றும் இயக்குனர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமான 'தண்டேல்' தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகிறது. தெலுங்கில் சாய் பல்லவி மற்றும் கருணாகரன் ஆகியோர் நடிக்கும் 'தண்டேல்' திரைப்படம், தெலுங்கில் அறிமுகமாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.