/indian-express-tamil/media/media_files/uN1cQ0vPMp4EiNsR1Nk1.jpg)
சன் டி.வி புது சீரியலில் 'புது வசந்தம்' சித்தாரா: கதை என்ன?
சன் டிவியில் ‘பூவா தலையா’ என்ற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பூவா தலையா’ என்ற தலைப்பே சீரியலில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது எனபது தெரிகிறது. இந்த ‘பூவா தலையா’ புது சீரியல் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், 1990-ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘புது வசந்தம்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகை சித்தாரா ‘பூவா தலையா’ சீரியலில் நடிக்கிறார் என்பதுதான். அதுமட்டுமல்ல, பாவம் கணேசன் சீரியலில் நடித்த சுவேதா ஷ்ரிம்ப்டன் கதாநாயகியாக நடிக்கிறார்.
நடிகை சித்தாரா நடிக்கும் பூவா தலையா சீரியலின் கதை குறித்து வட்டாரங்கள் தெரிவிக்கையில், பூவா தலையா சீரியல் ஒரு சின்ன நகரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒரு மாநகரப் பெண்ணைக் காதலிப்பதைச் சுற்றி நகரும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், அவளது கூச்ச சுபாவமும் தொடர்ச்சியான சூழ்நிலைகளும் அவளை அவனிடம் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்கின்றன.
சன் டிவியின் இந்த புதிய சீரியலில் சித்தாரா, லதா ராவ் மற்றும் சுவேதா ஷ்ரிம்ப்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் வேறு எந்த நடிகர்கள் மற்றும் குழுவினர் நடிக்க உள்ளார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.