Raja Rani 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில், அர்ச்சனா தனது நாத்தனார் பார்வதியின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக முன்னாள் பாய் ஃபிரெண்ட் விக்கியை வரவழைத்து அவனையும் பார்வதியையும் கொடவுனுக்குள் அனுப்பி பூட்டிவிட்டு பார்வதியை அசிங்கப்படுத்த சதி செய்கிறாள். இப்படி பெரிய ட்விஸ்ட்டாக இன்றைய எபிசோடு அமைந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல், ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், வைஷ்ணவி சுந்தர், பிரவீனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். முதலில் சுமாராக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடில், சுந்தரம் ஹாலில் உட்கார்ந்து டீப்பா மீது இருக்கும் பேப்பரை எடுத்து, முதல் ஆளாக பேப்பரை எடுத்து படிப்பதே தனி சுகம் என்று கூறுகிறார். அருகில் அமர்ந்திருக்கும் சிவகாமி அவரை கிண்டல் செய்யும் விதமாக படிச்சு என்ன செய்தீங்க, ஏதாவது பிரயோஜனம் இருக்கா என்று கேட்கிறார். அதற்கு சுந்தரம், பேப்பர் படித்தால் ஆடி தள்ளுபடியில் இருந்து எல்லாமே தெரிந்துகொள்ளலாம் என்று கூறுகிறார். சுந்தரம் பேப்பர் படிப்பதைப் பற்றி செந்தில், சிவகாமி எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்.
சந்தியாவை அழைத்து வாங்கி வந்த மளிகை சாமான்களை சரிபார்க்கச் சொல்கிறார். அப்போடு, டீ குடித்துக்கொண்டிருக்கும் பார்வதி, இரவு விக்கி சுவர் ஏறி குதித்து தன்னைப் பார்க்க வந்ததை சந்தியா அண்ணியிடம் பேசிவிட்டு வந்துவிட வேண்டியதுதான் என்று மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.
சிவகாமி, பார்வதியிடம் இந்த டீ குடித்த கிளாஸ்களை கழுவி எடுத்துவர கூறுகிறாள். இரவு விக்கி வந்ததைப் பற்றிய கவலையில் இருக்கும் பார்வதி சரி என்று கவனிக்காமல் கிச்சன் இருக்கும் திசைக்கு எதிர் பக்கம் செல்கிறாள். சிவகாமி இதைப் பார்த்துவிட்டு, கிச்சன் எந்தப் பக்கம் இருக்கும் நீ எந்தப் பக்கம் போற என்று கேட்கிறாள். அதற்கு, பார்வதி தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி சமாளிக்கிறாள். சிவகாமி, பார்வதியிடம் நீ இப்படி இருந்தால் போற இடத்துல என்னைதான் திட்டுவாங்க என்று கூறுகிறாள். சந்தியாவும் பார்வதியைக் காப்பாற்ற அவளுக்கு உடம்பு சரி இல்லை என்று சமாளிக்கிறாள்.
சுந்தரமும், நம்ம சந்தியா மாதிரி போற இடத்தில் பார்வதி நல்ல மகள்னு பேர் எடுப்பா என்று ஆதரவாக பேசுகிறார். சிவகாமி, பார்வதியை போய் தூங்க சொல்லிவிட்டு, சந்தியாவிடம் டீ கிளாஸை கழுவி வைக்க சொல்கிறார். அதோடு, மளிகை பொருள் வாங்க செந்திலிடம் 200 ரூபாய் எடுத்துகொண்டு வா என்று கூறுகிறார். காலையில் நம்ம கிட்ட பணம் கேட்கிறார்களே என்று செந்தில் சரி என்று போகிறான். இதை பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனா, காலையில காத்து நம்ம பக்கம் அடிக்கலையேனு பார்த்தேன் என்று அவளுடைய கணவன் செந்திலிடம் மாமியார் சிவகாமி பணம் கேட்டது பற்றி மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்.
இதையடுத்து, சிவகாமி வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் வேலையைப் பிரித்து கொடுக்கிறார். அப்போது, சரவணன் வெளியூறுக்கு போயிருப்பதால், ஸ்வீட் கடையைப் பார்த்துக்கொள்ள யார் போவது என்ற கேள்வி வரும்போது, சுந்தரம் நான் போகிறேன் என்று கூறுகிறார். துணைக்கு சந்தியா போவதாக சொல்லும்போது, சிவகாமி வேண்டாம். நீ போனால், இவர் கண்டபடி 2 பிளே பக்கோடா சாப்பிடுவார். இவரை பார்த்துக்க நான் போகிறேன் என்று கிளம்பி செல்கிறார்.சந்தியா தனது வேலையைப் பார்க்கிறாள்.
அப்போது, பார்வதி வீட்டின் பின்புறத்தில் கிணற்றடியில் ஆழ்ந்து யோசித்தபடி நின்றுகொண்டிருக்கிறாள். இதைப் பார்த்த அர்ச்சனா, அவளிடம் என்ன ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாய் என்று கேட்கிறாள். பார்வதி அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி சமாளிக்கிறாள். அதற்கு அர்ச்சனா இப்பல்லாம் நீ சந்தியா கூடதான் அதிகமா இருக்க என்று கூறுகிறாள். பார்வதி அதெல்லாம் ஒன்னுமில்லை என்று கூறுகிறாள்.
அர்ச்சனா மனதுக்குள் “எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கிறது. எதையும் வெளிக்காட்டாமல் எவ்வளவு அழுத்தமாக இருக்கிறாள் பாரு” சொல்லிக்கொள்கிறாள்.
தொடர்ந்து பேசும், அர்ச்சனா, எனக்கு பார்வதி உன் மேல இருக்கிற அக்கறை குறையவில்லை. உன் நிச்சயதார்த்தத்துக்கு புதிய புடவை தரலாம்னு இருக்கேன். நீயே வந்து செலக்ட் பண்ணி எடுத்துக்கோ என்று சொல்கிறாள். அர்ச்சனா பார்வதியை சதித்திட்டத்தில் சிக்க வைக்க திட்டமிட்டு, சரி வா போகலாம் என்று அழைத்துச் செல்கிறாள். அப்போது, சந்தியா எங்கே போகிறீர்கள் என்று கேட்கிறாள். அதற்கு அர்ச்சனா, சந்தியாவிடம் நீ மட்டும்தான் பார்வதிகூட இருக்கனுமா நான் இருக்ககூடாதா என்று சண்டை போட்டுவிட்டு, பார்வதியை துணிக்கடைக்கு கூப்பிட்டுக்னு போறேன். அவங்க அண்ணன்தான் கம்ப்யூட்டரில் ஏதோ ரிப்பேராம் அதைப் பார்க்க அழைத்துச் செல்கிறேன் என்றுகூறுகிறாள்.
இதனிடையே, அர்ச்சனா விக்கிக்கு போன் செய்து அவனை வரச் சொல்கிறாள். சொன்னபடி சொதப்பாமல் செய்யனும் என்று கூறுகிறாள்.
இதையடுத்து, அர்ச்சனா பார்வதியை அழைத்துக்கொண்டு போகிறாள். பார்வதி முன்னே சென்று கொண்டிருக்கும்போது, அர்ச்சனா பின்னால் நின்று, விக்கிக்கு போன் செய்து வந்துவிட்டாயா, என்று கேட்கிறான். அவனும் வந்துவிட்டேன், நீங்க சொன்ன இடத்தில்தான் இருக்கிறேன் என்று கூறுகிறான்.
இதனிடையே, வீட்டுக் வரும் செந்தில், சந்தியாவிடம் அர்ச்சனா எங்கே என்று கேட்கிறான். அதற்கு சந்தியா, நீங்கதான், கூப்பிட்டுக்கொண்டு வரச் சொன்னதா அர்ச்சனா, பார்வதியை கூப்பிட்டுகொண்டு துணிக்கடைக்கு போயிருக்கிறாங்க என்று கூறுகிறாள். அதற்கு செந்தில் நான் சொல்லவே இல்லை என்று கூறுகிறான். இதனால், அதிர்ச்சி அடையும் சந்தியா ஏதோ பெரிய தப்பு நடக்கப்போகிறதோ பயமா இருக்குது என்று சொல்கிறாள். பார்வதிக்கு போன் செய்தாலும் போன் போகவில்லை என்று பதற்றமாகிறாள். செந்திலும் இதைக்கேட்டு டென்ஷன் ஆகிறான்.
அடுத்த காட்சியில், அர்ச்சனா, பார்வதியை கொடவுனுக்கு கூட்டிகொண்டு போய், நீ போய் புடவையைப் பார்த்துக்கொண்டிரு என்று கொடவுனுக்குள் அனுப்பி வைத்துவிட்டு வெளியே நிற்கிறாள். பிறகு, விக்கியை அழைத்து, நான் சொல்றதைக் கேட்டால்தான், நீ பார்வதியை கல்யாணம் பண்ணிக்க முடியும் என்று சொல்லி உள்ளே போ என்கிறாள். அதற்கு விக்கி, சரி என்று சொல்லிவிட்டு, பார்வதி உன் ஒரு அண்ணியால பட்ட அவமானத்துக்கு இன்னொரு அண்ணி மூலம் பழிவாங்கப் போறேன். பார்வதி உன்னை நான் மட்டும் இல்லை வேற எவனுமே கல்யாணம் பண்ணக் கூடாது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு உள்ளே போகிறான்.
பார்வதி, விக்கியைப் பார்த்துவிட்டு கொடவுன் ரேக்குகளுக்குள் இடையே மறைந்து மறைந்து செல்கிறாள். பார்வதி இது அர்ச்சனா அண்ணியின் திட்டம்தான் என்று புரிந்துகொள்கிறாள். விக்கி, பார்வதி எங்கே என்று தேடுகிறான். பார்வதி அர்ச்சனா விரித்த சதி வலையில் சிக்கிவிட்டாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
இதனால், ராஜா ராணி 2 சீரியலில் ஊரில் சரவணனும் இல்லை. இப்போது சந்தியா மட்டும்தான் இருக்கிறாள். பார்வதியைக் காப்பாற்றுவாளா என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.