தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு (ஜூன் 1) காலமானார். 2013-ஆம் ஆண்டு வெளியான ”மதயானைக் கூட்டம்” மற்றும் 2023-ஆம் ஆண்டு வெளியான ”இராவணக்கோட்டம்” ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மேலும், பல படங்களில் பணியாற்றி உள்ள விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் வெற்றிமாறனுடன் இணைந்து ஆடுகளம் படத்தில் வசனமும் எழுதி உள்ளார்.
மேலும் ”பொல்லாதவன்” மற்றும் ”கொடி வீரன்” போன்ற படங்களில் நடித்தும்உள்ளார். 2013-ம் ஆண்டு மதயானைக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல ஒரு பெயர் கிடைத்தது. இருப்பினும் அடுத்த படம் உடனடியாக கிடைக்கவில்லை. 2023-l சாந்தனுவை ஹீரோவாக வைத்து ”இராவணக்கோட்டம்” என்ற படத்தை இயக்கியிருந்தார். மக்கள் பிரச்னையை படம் பேசி இருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்துள்ளார். பிறகு பாலு மஹேந்திராவுடன் இணைந்ததால் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். விக்ரம் சுகுமாரன் மறைவு திரைத்துறையில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இவரின் மறைவை ஒட்டி நடிகர் ஷாந்தனு எக்ஸ் தளத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
"அன்புள்ள சகோதரரே, என்னைப் பிரியப்படுத்துங்கள். உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன், ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் போற்றுவேன். மிக விரைவில் போய்விட்டது. உங்களை மிஸ் பண்ணுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது விக்ரம் சுகுமாரன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.