New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/03/dch7On36FRkJqpnn5jsZ.jpg)
நடிகரும், ரேஸருமான அஜித்குமார், தனது மகனுடன் கார் ரேஸ் பந்தய மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள கார் ரேஸ் மைதானத்தில், நடிகரும், ரேஸருமான அஜித்குமார், தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
அஜித்குமார் ரேஸிங் என்ற கார் ரேஸ் குழுவை உருவாக்கிய நடிகர் அஜித், பல்வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். குறிப்பாக, இந்தப் போட்டிகளில் அவரது அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்வில், குடியரசு தலைவரிடமிருந்து பத்ம பூஷன் விருதை அஜித்குமார் பெற்றார். மேலும், பல ஆண்டுகளாக ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதை தவிர்த்து வந்த அஜித், சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு நேர்காணல் அளித்தார். முன்னதாக, அவரது நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' என்ற திரைப்படம் வர்த்தக் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால், அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சூழலில், சென்னை அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் ரேஸ் மைதானத்தில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, அஜித் மற்றும் அவரது மகன் ஆத்விக் இருவரும் ரேஸ் உடையில் ஹெல்மெட்டுடன் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இந்தியாவின் முதல் எஃப் 1 கார் ரேஸரான நரேன் கார்த்திகேயனிடம் இருந்து, ஆத்விக் ஆலோசனை பெறுவது போன்ற புகைப்படமும் ட்ரெண்டாகி வருகிறது.
அந்த வகையில், நடிகர் அஜித்தின் வீட்டில் இருந்து அடுத்த ரேஸர் உருவாகி வருவதாக அவரது ரசிகர்கள் இப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.